ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் |
தமிழில் அஜித் நடித்த வேதாளம் படத்தில் வில்லன்களில் ஒருவராக அறிமுகமானவர் நடிகர் கபீர் துகான் சிங். தொடர்ந்து றெக்க, காஞ்சனா 3, ஆக்ஷன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இன்னொரு பக்கம் தெலுங்கு, கன்னட மொழிகளிலும் பிஸியாக நடித்து வந்த இவர் கடந்த வருடம் மம்முட்டி நடிப்பில் வெளியான டர்போ படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் மலையாள திரை உலகில் நுழைந்தார். அதைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியான அஜயன்டே ரெண்டாம் மோசனம் என்கிற படத்திலும் வில்லனாக நடித்திருந்தார்.
ஆனால் சில வாரங்களுக்கு முன்பு உன்னி முகுந்தன் நடிப்பில் வெளியான மார்கோ திரைப்படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தான் இவர் அதிக அளவில் தற்போது மலையாள ரசிகர்களால் கவனிக்கப்பட்டுள்ளார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக மலையாளத்தில் தற்போது சுரேஷ் கோபி நடிப்பில் உருவாகி வரும் ஒத்த கொம்பன் என்கிற படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் கபீர் துகான் சிங். இந்த படத்தை மேத்யூ தாமஸ் என்பவர் இயக்குகிறார்.