தக்லைப் படத்தின் 'விண்வெளி நாயகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது! | நான் சந்தோஷத்தை வெளியில் தேடியது கிடையாது! - 'குபேரா' பட விழாவில் தனுஷ் பேச்சு | தோழிகள் படைசூழ தாய்லாந்து நாட்டிற்கு டூர் சென்ற கவுரி கிஷன்! | அந்தமான் செல்லும் சாய் தன்சிகா: ஏன் தெரியுமா? | பட விழாவுக்கு வரமுடியாததால் வீடியோகாலில் பேசிய யோகிபாபு | தமிழகத்திலும் அந்த படங்கள் வரும்: கஸ்துாரி கணிப்பு | தம்பிகளா, தள்ளிப்போய் விளையாடுங்க: தனுஷ் ஆவேசம் | பிறந்தநாளன்று இளையராஜா சொன்ன இனிப்பான செய்தி | 'தக் லைப்' படத்திற்கு கர்நாடகாவில் தடை: வழக்கு தொடர்ந்த கமல்ஹாசன் | விஜய் மில்டன் படத்தில் இணைந்த பரத் |
கன்னட நடிகர் தர்ஷன் சில மாதங்களுக்கு முன்பு தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவரை கொலை செய்தார் என குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தனது காதலியும் நடிகையுமான பவித்ரா கவுடா என்பவருக்கு ரேணுகா சுவாமி தொடர்ந்து ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி டார்ச்சர் கொடுத்தார் என்பதற்காக அவர் இந்த குற்றத்தில் ஈடுபட்டார் என சொல்லப்பட்டது.
நடிகை பவித்ரா கவுடா உட்பட 16 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். பல மாதங்களாக ஜாமின் மறுக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த மாதம் அனைவருக்குமே நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதனைத் தொடர்ந்து பெங்களூருக்கு மைசூருக்கு அருகில் உள்ள தனது பண்ணை வீட்டில் சென்று வசித்து வருகிறார் தர்ஷன்.
இந்த பிரச்சனைக்கு முன்னதாக தனது மனைவி விஜயலட்சுமி உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து இருந்தார் தர்ஷன். ஆனால் இந்த வழக்கில் தர்ஷனை வெளியே கொண்டு வருவதற்காக அவரது மனைவி விஜயலட்சுமி தான், கருத்து வேறுபாடுகளை மறந்து முனைப்புடன் செயல்பட்டு வந்தார். தர்ஷன் சிறையிலிருந்து வெளிவந்ததும் மனைவி விஜயலட்சுமி, மகன் வினீஷ் ஆகியோரும் தற்போது தர்ஷனுடன் தான் இந்த வீட்டில் இருக்கிறார்கள்.
இந்த சங்கராந்தி பண்டிகையை தனது குடும்பத்துடன் கொண்டாடி தனது ரசிகர்களுக்கும் வாழ்த்து கூறியுள்ளார் நடிகர் தர்ஷன். அவர் இப்படி குடும்பத்துடன் ஒன்றிணைந்து சந்தோசமாக பண்டிகையை கொண்டாடுவதை பார்த்து அவரது ரசிகர்கள், தங்களது பாஸ் திரும்பி வந்து விட்டார் என உற்சாகமாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.