ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' |

தமிழில் அஜித் நடித்த வேதாளம் படத்தில் வில்லன்களில் ஒருவராக அறிமுகமானவர் நடிகர் கபீர் துகான் சிங். தொடர்ந்து றெக்க, காஞ்சனா 3, ஆக்ஷன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இன்னொரு பக்கம் தெலுங்கு, கன்னட மொழிகளிலும் பிஸியாக நடித்து வந்த இவர் கடந்த வருடம் மம்முட்டி நடிப்பில் வெளியான டர்போ படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் மலையாள திரை உலகில் நுழைந்தார். அதைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியான அஜயன்டே ரெண்டாம் மோசனம் என்கிற படத்திலும் வில்லனாக நடித்திருந்தார்.
ஆனால் சில வாரங்களுக்கு முன்பு உன்னி முகுந்தன் நடிப்பில் வெளியான மார்கோ திரைப்படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தான் இவர் அதிக அளவில் தற்போது மலையாள ரசிகர்களால் கவனிக்கப்பட்டுள்ளார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக மலையாளத்தில் தற்போது சுரேஷ் கோபி நடிப்பில் உருவாகி வரும் ஒத்த கொம்பன் என்கிற படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் கபீர் துகான் சிங். இந்த படத்தை மேத்யூ தாமஸ் என்பவர் இயக்குகிறார்.




