திருப்பதி அடிவாரத்தில் நடுரோட்டில் பிச்சை எடுக்க வைத்து விட்டார் சேகர் கம்முலா! வைரலாகும் தனுஷின் வீடியோ | ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்! | கவர்ச்சிக்கு நோ சொல்லும் ரக்ஷிதா | மலேசியாவில் ஓய்வெடுக்கும் பாரதிராஜா | நெல் ஜெயராமன் மகனுக்கு உதவும் சிவகார்த்திகேயன் | ஆசியாவிலேயே மிகப்பெரிய செட் எது தெரியுமா? | விறுவிறுப்பாக நடந்து வரும் 'கூலி' வியாபாரம் | 'தக் லைப்' விவகாரம் : கன்னட அமைப்புகளுக்கு கர்நாடக துணை முதல்வர் வேண்டுகோள் | அதர்வாவுக்கு திருப்பத்தைத் தருமா 'டிஎன்ஏ'? | விமர்சனங்களால் கவலையில்லை.. கடைசி காலத்தில் இதை பார்த்து மகிழ்வேன் : அஜித் பேட்டி |
சமீபத்தில் நடைபெற்று முடிந்த லோக்சாபா தேர்தலில் கேரளாவில் பாஜக சார்பாக திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட பிரபல நடிகர் சுரேஷ் கோபி வெற்றி பெற்று எம்பி ஆகியுள்ளார். அது மட்டுமல்ல சமீபத்தில் அறிவிக்கப்பட்ட புதிய அமைச்சரவையில் அவரும் ஒரு அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். கேரளாவில் முதன்முறையாக பாஜகவிற்கு ஒரு எம்பியை தேடிக்கொடுத்ததற்காக அவருக்கு இந்த அமைச்சர் பதவி பரிசாக கிடைத்துள்ளது. இந்த நிலையில் சுரேஷ் கோபி தனது அரசு உதவியாளராக தன்னுடைய ஆஸ்தான மேக்கப் மேனான சினோஜ் என்பவரை நியமித்துள்ளார்.
கடந்த 18 வருடங்களாக சுரேஷ் கோபிக்கு மேக்கப்மேனாகவும் அவரது சுக துக்கங்களில் பங்கெடுத்துக் கொள்ளும் ஒரு நண்பராகவும் பயணித்து வந்த சினோஜ், தற்போது இதன் மூலம் புதிய வெளிச்சம் பெற்றுள்ளார். இதற்கு முன்பே சுரேஷ் கோபி ராஜ்யசபா எம்பியாக இருந்த போதும் ஒரு வருடம் அவருக்கு அரசு உதவியாளராக இவர் வேலை பார்த்துள்ளார் என்பதும், தற்போது மீண்டும் சுரேஷ்கோபி மத்திய அமைச்சராகி உள்ள நிலையில் அவரது உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.