
யுவ ராஜ்குமாருடன் விவாகரத்து ஏன்? - மனைவி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
இந்த நிலையில் தனது விவாகரத்து குறித்து மனம் திறந்துள்ள ஸ்ரீதேவி பைரப்பா, கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு வரை தங்களது திருமண வாழ்க்கை நன்றாகவே சென்று கொண்டிருந்தது என்றும் கடந்த ஒரு வருடமாகவே யுவ ராஜ்குமாரின் நடவடிக்கைகளில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டதை பார்க்க முடிந்தது என்றும் கூறியுள்ளார். குறிப்பாக தன்னுடன் நடித்த சக நடிகையுடன் அவருக்கு மிகவும் நெருக்கம் ஏற்பட்டதாகவும் அது தனக்குத் தெரிய வந்தபோது அப்போதிருந்து தன்னிடம் தனது கணவர் மட்டுமல்ல, அவரது பெற்றோரும் சேர்ந்து வெறுப்பு காட்ட துவங்கினார்கள் என்றும் கூறியுள்ளார்.
மேலும் தான் இங்கிருந்தால் ஏதாவது பிரச்சனை செய்வேன் என்பதற்காக தன்னை மேல் படிப்பு படிப்பதற்கு கல்விக்கடன் பெற வைத்து வலுக்கட்டாயமாக அமெரிக்காவிற்கு ஒரு வருட காலம் அனுப்பி வைத்தார்கள் என்றும் அவர் கூறியுள்ளார் ஸ்ரீதேவி. யுவ ராஜ்குமாருக்கும் அவருடன் நடித்த சக நடிகைக்கும் இருக்கும் நெருக்கம் தெரிந்தும் கூட தான் அவரைப் பற்றி வெளியே எதுவும் பேசாமல் பொறுமை காத்து வந்த நிலையில் தற்போது தன்னையே களங்கப்படுத்தும் விதமாக அவர்கள் விவாகரத்து விண்ணப்பத்தில் உண்மைக்கு புறம்பான விஷயங்களை குறிப்பிட்டதை பார்த்த பிறகு என்னால் பேசாமல் இருக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார் ஸ்ரீதேவி பைரப்பா.
தனது நீண்ட நாட்கள் தோழியான ஸ்ரீதேவியை காதலித்து திருமணம் செய்து கொண்ட யுவ ராஜ்குமார் சினிமாவில் நுழைந்து ஒரு படமே நடித்து வெளியாகியுள்ள நிலையில் விவாகரத்திற்கு வின்னப்பித்துள்ளதும் இப்படி மனைவியின் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளதும் கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!