தமிழுக்கு வருகிறார் ஜான்வி கபூர் | புதிய பிராண்ட் கார் வாங்கிய சீரியல் நடிகை வைஷாலி தனிகா! | ரஜினிக்கு எழுதிய கதையை சூர்யாவுக்காக திருத்தம் செய்த கார்த்திக் சுப்பராஜ்! | சிவகார்த்திகேயன் - ஸ்ருதிஹாசனை இயக்கும் லோகேஷ் கனகராஜ்! | வேட்டையனை தொடர்ந்து ஜெயிலர் -2விலும் ரஜினியுடன் இணைந்த பஹத் பாசில்! | காஷ்மீர் தாக்குதல்: உயிர் தப்பிய பாலிவுட் நடிகை | சொட்டைத் தலையர்களின் கதை 'சொட்ட சொட்ட நனையுது' | பெரிய பட்ஜெட்டில் உருவான 'டிடி நெக்ஸ்ட் லெவல்': சந்தானம் தகவல் | நான் சிம்ரனோடு நடிக்க கூடாதா: சசிகுமார் கேள்வி | பிளாஷ்பேக்: அப்போதே அதிர வைத்த திகில் படம் |
மலையாள திரையுலகில் மோகன்லால், மம்முட்டிக்கு இணையான முன்னணி நடிகராக நடித்து வந்தவர் நடிகர் சுரேஷ்கோபி. இடையில் பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு அரசியலில் கவனம் செலுத்திய அவர் சினிமாவில் ஒரு பெரிய இடைவெளியை விட்டார். தற்போது கடந்த சில வருடங்களாக மீண்டும் படங்களில் நடித்து வருகிறார் சுரேஷ்கோபி. அதே சமயம் அரசியலிலும் தீவிர கவனம் செலுத்தி வந்த சுரேஷ் கோபி, சமீபத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதுவரை கேரளாவில் பா.ஜ.,விற்கு எம்.பி.,க்களே இல்லை என்கிற நிலையில் முதன்முதலாக அந்த பெருமையையும் பெற்றுத் தந்துள்ளார் சுரேஷ்கோபி.
அவரது வெற்றிக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகரும் சுரேஷ்கோபியும் நண்பருமான மம்முட்டி, சுரேஷ்கோபி நடிக்க உள்ள அடுத்த படத்தை தனது தயாரிப்பு நிறுவனமான மம்முட்டி கம்பெனி தயாரிக்கிறது என்கிற அறிவிப்பை சூட்டோடு சூடாக வெளியிட்டு தனது வாழ்த்துகளை சுரேஷ்கோபிக்கு தெரிவித்துள்ளார். இந்த படத்தை யார் இயக்க உள்ளார்கள், மேலும் இதில் நடிக்க உள்ள நட்சத்திரங்கள் யார் என்பதெல்லாம் இனிவரும் நாட்களில் தான் தெரிய வரும்.