இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் | இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' | பிளாஷ்பேக் : உச்ச நட்சத்திரம் என்ற பட்டத்திற்கு அச்சாரமிட்ட ரஜினியின் “பைரவி” | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் |
அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 படம் வசூலில் 2 ஆயிரம் கோடியை நெருங்கிக் கொண்டிருந்தாலும், அல்ல அர்ஜுனுக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது. ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் கடந்த மாதம் 4ந் தேதி புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டபோது நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அவரது 9 வயது மகன் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளார்.
இந்த வழக்கில் அல்லு அர்ஜுனை குற்றவாளியாக்கிய அரசு, கடந்த 13ந் தேதி கைது செய்து சிறையில் அடைத்தது. இந்த வழக்கில் அல்லு அர்ஜுனுக்கு ஐதராபாத் உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் இந்த வழக்கு நடந்து வரும் நம்பள்ளி கோர்ட்டு நேற்று அல்லு அர்ஜுனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ஒரு லட்சம் ரூபாய் பிணயத் தொகையுடன் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும், கோர்ட்டு அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது என்றும் நிபந்தனை விதித்துள்ளது.