தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 படம் வசூலில் 2 ஆயிரம் கோடியை நெருங்கிக் கொண்டிருந்தாலும், அல்ல அர்ஜுனுக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது. ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் கடந்த மாதம் 4ந் தேதி புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டபோது நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அவரது 9 வயது மகன் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளார்.
இந்த வழக்கில் அல்லு அர்ஜுனை குற்றவாளியாக்கிய அரசு, கடந்த 13ந் தேதி கைது செய்து சிறையில் அடைத்தது. இந்த வழக்கில் அல்லு அர்ஜுனுக்கு ஐதராபாத் உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் இந்த வழக்கு நடந்து வரும் நம்பள்ளி கோர்ட்டு நேற்று அல்லு அர்ஜுனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ஒரு லட்சம் ரூபாய் பிணயத் தொகையுடன் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும், கோர்ட்டு அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது என்றும் நிபந்தனை விதித்துள்ளது.