பவதாரிணிக்கு இசை அஞ்சலி செலுத்திய ஷாலினி | அருள்நிதிக்கு ஜோடியாகும் தன்யா ரவிச்சந்திரன்! | தரைமட்டமானது சென்னை அடையாளங்களில் ஒன்றான உதயம் தியேட்டர் | வலைதளங்களில் வைரலான அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ | பழசை மறக்காத சூரி | ஹேக் செய்யப்பட்ட திரிஷாவின் எக்ஸ் கணக்கு | இரண்டு பாகங்களாக உருவாகும் கார்த்தியின் 29வது படம்! | ஆண் குழந்தை தான் வாரிசுக்கு அடையாளமா... சிரஞ்சீவி பேச்சால் சர்ச்சை | 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' இசை வெளியீட்டு விழாவை தனுஷ் புறக்கணித்தது ஏன்? | நான் காப்பி ரைட்ஸ் கேட்க மாட்டேன் - இசையமைப்பாளர் தேவா |
மலையாள திரையுலகில் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்து விட்ட முன்னணி நடிகர் பிரித்விராஜ். தனது லட்சிய கனவான டைரக்சன் துறையிலும் அடி எடுத்து வைத்து கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு நடிகர் மோகன்லாலை வைத்து லூசிபர் என்கிற மிகப்பெரிய வெற்றி படத்தை இயக்கினார். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் அவரை வைத்தே ப்ரோ டாடி படத்தை இயக்கி அதிலும் வெற்றி கண்டார். தற்போது லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள எம்புரான் படத்தையும் இயக்கி முடித்து விட்டார். முதல் பாகத்தைப் போல இந்த இரண்டாம் பாகமும் விறுவிறுப்பாக உருவாகியுள்ளதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் மோகன்லால்.
மேலும் பிரித்விராஜுடன் தான் பணிபுரிந்த அனுபவம் குறித்து மோகன்லால் கூறும்போது, “பிரித்விராஜ் ஒரு அற்புதமான இயக்குனர். அவருக்கு எல்லாவித சாதனங்களும், லென்ஸ்களும், நடிகர்களும், அவர்களை எப்படி கையாள வேண்டும் என்பதும் நன்றாகவே தெரியும். தான் நினைத்தது வரும் வரை எந்த ஒரு நடிகரையும் விட மாட்டார், அவருடன் பணியாற்றுவது கொஞ்சம் கடினம் தான், நாம் நல்ல நடிகராச்சே என்கிற ஈகோ எல்லாம் அவரிடம் செல்லுபடி ஆகாது, அவரிடத்தில் நீங்கள் எப்படியும் உங்களை சரண்டர் பண்ணிக் கொண்டால்தான் சிறப்பாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.