பெத்தி படத்தின் டப்பிங் பணிகளை துவங்கிய ராம் சரண் | அதிர்ஷ்டசாலி படத்திற்கு அதிர்ஷ்டம் | கடைசி நிமிடங்களில் கத்தாரில் இருந்து தப்பிய சந்தோஷ் நாராயணன் | கிராமத்து கோவிலில் சிறப்பு பூஜை நடத்திய விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய ரியோ ராஜ் | அஜித் கார் ரேஸ் சினிமாவாகிறது : சிவகார்த்திகேயன், அனிருத் நடிக்கிறார்களா? | நான் கோமாளி அல்ல, ஏமாளி : கூல் சுரேஷ் கண்ணீர் | ஜூலையில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரிலீஸ் : கருப்பு எப்போது... | 'டாடா' போஸ்டர் ஸ்டைலில் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' போஸ்டர் | சினிமாவை விட்டு விலக நினைத்தேன்: நிவேதிதா சதீஷ் |

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் கிச்சா சுதீப் பல வருடங்களுக்கு முன்பே தென்னிந்திய அளவில் மட்டுமல்லது பாலிவுட்டிலும் பிரபலமான நடிகராக மாறியவர். குறிப்பாக ராஜமவுலியின் 'நான் ஈ' திரைப்படம் அவரை மிகப்பெரிய அளவிற்கு கொண்டு சென்றது. அதன் பிறகு கிடைத்த புகழால் தற்போதுவரை கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 10 வருடங்களாக தொகுத்து வழங்கி வருகிறார் சுதீப்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது தாயார் சரோஜா சஞ்சீவ் காலமானார். தன் தாய் மீது மிகுந்த பாசம் கொண்ட கிச்சா சுதீப்புக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சி தான். தற்போது சுதீப் நடித்துள்ள 'மேக்ஸ்' என்கிற திரைப்படம் வரும் டிசம்பர் 25ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் சுதீப் தனது தாயார் குறித்து நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
இது பற்றி அவர் கூறும் போது, “தினசரி என் அம்மாவிடம் ஏதாவது பேசி விடுவேன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நான் அணியும் விதவிதமான உடைகளை அணிந்து கண்ணாடி முன் நின்று புகைப்படம் எடுத்து அதை என் அம்மாவுக்கு அனுப்பி வைப்பேன். அது அவ்வளவு ஆர்வமாக இருக்கும். அவரும் அதை பார்த்து விட்டு பாராட்டியோ கிண்டலாகவோ எதோ ஒன்று சொல்வார். ஆனால் அவரது மறைவுக்குப் பிறகு எனக்கு அப்படி விதவிதமான ஆடைகளை அணிவதே பிடிக்கவில்லை. அதன் பிறகு இரண்டு மூன்று எபிசோடுகளில் சாதாரணமான குர்தா மட்டுமே அணிந்தேன்.
ஆனால் இந்த நிகழ்ச்சியில் என்னை எதிர்பார்த்து காத்திருக்கும் பல ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கும். என்னுடைய பர்சனல் விஷயங்களுக்காக அவர்களை ஏமாற்ற கூடாது என நினைத்து மீண்டும் பழையபடியே பிக்பாஸுக்கான உடைகளை அணியை துவங்கியுள்ளேன்” என்று கூறியுள்ளார் சுதீப்.




