ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
'புஷ்பா 2' படத்தின் பிரிமியர் காட்சி ஹைதராபாத்தில் நடைபெற்ற போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் இறந்து போனார். அவருடைய மகன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார். இந்த விவகாரத்திற்காக நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
சிறையிலிருந்து வெளியில் வந்த அல்லு அர்ஜுனை தெலுங்கு சினிமா பிரபலங்கள் பலரும் நேரில் சென்று சந்தித்தனர். அதே சமயம், நடிகர் சிரஞ்சீவி, அவரது தம்பி நாகபாபு ஆகியோரது வீட்டிற்கு அல்லு அர்ஜுனே நேரில் சென்றார். அடுத்து அவர்களது தம்பியும், ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாணையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பவன் கல்யாண் அதற்கான அப்பாயின்மென்ட்டை இன்னும் அல்லு அர்ஜுனுக்குத் தரவில்லை.
சிரஞ்சீவி தரப்பிலிருந்தும் பவன் கல்யாணிடம் பேசியுள்ளதாகத் தெரிகிறது. இருந்தாலும் ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலின் போது தங்கள் கூட்டணி கட்சிக்கு எதிராகப் போட்டியிட்டவருக்கு அல்லு அர்ஜுன் பிரசாரம் செய்த கோபத்தில் பவன் இன்னும் இருப்பதாகச் சொல்கிறார்கள். இருந்தாலும் விரைவில் பவன் கல்யாண் அப்பாயின்மென்ட் கொடுப்பார் என்ற நம்பிக்கையுடன் அல்லு அர்ஜுன் இருக்கிறாராம்.