இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! | ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' |
மலையாள திரையுலகில் எங்கள் சொந்தம் லாலேட்டன் என அனைத்து மக்களும் கொண்டாடும் நடிகர் மோகன்லால். தி கம்ப்ளீட் ஆக்டர் என்று அழைக்கப்படும் அளவிற்கு தான் ஏற்றுக் கொள்ளும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மிகுந்த சிரத்தையுடன் நடிப்பதில் ரொம்பவே மெனக்கெடுவார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு கொரோனா தாக்கம் காரணமாக படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்த சமயத்தில் தனது நண்பரும், சக நடிகருமான மணியம்பிள்ளை ராஜு என்பவரை அழைத்து நடிக்காமல் வீட்டில் அடைந்து கிடப்பது மிக கொடுமையாக இருக்கிறது என தனது வருத்தத்தை பகிர்ந்து கொண்டு உள்ளார். அதுமட்டுமல்ல இவர்கள் இருவரும் 1989ல் அதிபன் என்கிற படத்தில் இணைந்து நடித்த போது நடந்த ஒரு சம்பவத்தையும் மணியம் பிள்ளை ராஜு கூறியுள்ளார்.
அந்த படத்தில் ஒரு சண்டைக் காட்சியில் மோகன்லால் நடித்து வந்தார். அந்த சமயத்தில் அவருக்கு கடுமையான தொண்டை வலி. எந்த உணவுப் பொருளையும் விழுங்க கூட முடியாது. பரிசோதித்த டாக்டர்கள் அவரை மூன்று நாட்கள் ஓய்வெடுக்க கூறினார்கள். ஆனால் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்தாக வேண்டிய நிலை. இது எதையும் வெளிக்காட்டாமல் படப்பிடிப்பில் அந்த சண்டைக் காட்சியில் உயிரைக் கொடுத்து நடித்த மோகன்லால், ஒவ்வொருமுறை காட்சி ஓகே ஆனதும் அங்கே பக்கத்தில் இருந்த அறைக்குச் சென்று தொண்டை வலி தாங்க முடியாமல் அவர் கதறினார். அதை நான் கண்கூடாக பார்த்தேன்.
அவர் நினைத்து இருந்தால் சிம்பிள் ஆக மூன்று நாட்கள் ஓய்வெடுத்து விட்டு வந்திருக்கலாம். ஆனால் சினிமா மட்டுமே அவர் மூச்சாக இருப்பதால் தன் உடல் நிலையை கூட பொருட்படுத்தாமல் தன்னால் யாருக்கும் எந்தவித நஷ்டமும் வந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். மலையாள திரை உலகில் எல்லா நடிகர்களுமே கடினமாக உழைக்கிறார்கள் தான்.. ஆனால் இவர்கள் எல்லோரையும் தாண்டி மோகன்லால் ரொம்பவே ஸ்பெஷல்” என்று கூறியுள்ளார் மணியம்பிள்ளை ராஜு.