ரஜினி நடிக்கும் 'ஜெயிலர் 2': அதிகாரப்பூர்வ அறிவிப்பு | காதலர்களுக்கு அனுபமா பரமேஸ்வரன் தரும் எச்சரிக்கை டிப்ஸ் | நடிகை ஹனிராஸ் மீது அவதூறு பரப்பிய மீடியா ஆர்வலருக்கு ஜாமீன் மறுப்பு | நடிகையை உருவ கேலி செய்த இயக்குனர் : பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் | சரத்குமார் நடிக்கும் ஏழாம் இரவில் | தாராவியில் பொங்கல் கொண்டாடிய ஓவியா | பாடலாசிரியர் அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி! | தக் லைப் படத்தின் தெலுங்கு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! | அகண்டா 2ம் பாகம் படப்பிடிப்பு இன்று துவங்கியது! | 'இட்லி கடை' படத்தில் நித்யா மேனன் பர்ஸ்ட் லுக் வெளியானது! |
தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் நடிகர் மோகன் பாபு. நடிகர் ரஜினிகாந்த்தின் நீண்ட கால நெருங்கிய நண்பர். மோகன் பாபுவுக்கு லட்சுமி, விஷ்ணு, மனோஜ் என ஒரு மகள், இரண்டு மகன்கள் உள்ளனர். மூவருமே தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார்கள்.
கடந்த சில வருடங்களாக மோகன் பாபு குடும்பத்தில் சொத்து தகராறு நடந்து வருவதாகத் தகவல். திருப்பதியில் பள்ளி, கல்லூரி ஆகியவற்றை நடத்தி வருகிறார் மோகன் பாபு. அது மட்டுமல்லாமல் திருப்பதி, ஐதராபாத் ஆகிய இடங்களில் பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருக்கிறது.
நேற்று காலை மனோஜ் அவரது அப்பா மீது புகார் தெரிவித்ததாக பரபரப்பு ஏற்பட்டது. அது மட்டுமல்லாமல் மருத்துவமனைக்குச் சென்று தனக்கு ஏற்பட்ட காயத்திற்கு மனோஜ் சிகிச்சை மேற்கொண்டார். மகன் மீது மோகன் பாபுவும் புகார் அளித்தார் என்றும் தெரிகிறது. ஆனால், இது தவறான செய்தி என மோகன் பாபு குடும்பம் சார்பாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.
கடந்த வருடம் மனோஜும், அவரது அண்ணன் விஷ்ணுவும் சண்டை போட்டுக் கொண்டதாகவும் தகவல் வெளியானது. புமா மவுனிகா என்ற பெண்ணை மனோஜ் இரண்டாவது திருமணம் செய்து கொண்டது அவரது குடும்பத்தினருக்குப் பிடிக்கவில்லை. அதிலிருந்தே மனோஜுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே சண்டை நிலவி வருவதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.