தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

தெலுங்குத் திரையுலகத்தின் இனிமையான காதல் ஜோடியாக வலம் வந்து திருமணம் செய்து கொண்டு சீக்கிரத்திலேயே பிரிந்த ஜோடி நாகசைதன்யா - சமந்தா ஜோடி. பிரிந்த இந்த ஜோடியில் நாக சைதன்யா கடந்த வாரம் 'பொன்னியின் செல்வன்' நடிகை சோபிதா துலிபலாவைத் திருமணம் செய்து கொண்டார்.
அவர்களது திருமணத்திற்கு முன்பும், பின்பும் சில தத்துவமான பதிவுகளை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் நாக சைதன்யாவின் முன்னாள் மனைவி சமந்தா. பிரிந்து போனாலும் அவர்களது காதல் நிச்சயம் ஞாபகப்படுத்திக் கொண்டுதான் இருக்கும். கல்யாணம் வரை வந்து பிரிந்து போன காதல் உண்மைக் காதலா, பொய்க் காதலா என்ற ஏக்கம் சமந்தாவிடம் இருக்கிறது.
நேற்று அவருடைய இன்ஸ்டா ஸ்டோரியில் அவரது வளர்ப்பு நாய் சாஷாவுடன் இருக்கும் சோகமான புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து , “சாஷாவின் காதலைப் போல வேறு காதல் இல்லை,” எனப் பதிவிட்டுள்ளார்.
மனிதக் காதலை விட நாய்கள் வைக்கும் காதல்தான் உண்மையான காதல் என நினைக்கிறார் போலிருக்கிறது.