கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
எத்தனை விதமாக தடுக்க முயற்சி செய்தாலும் நாளுக்கு நாள் முன்னேறும் தொழில்நுட்பங்கள் காரணமாக சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. பிரபலங்களை குறி வைத்து தான் விஷமிகள் இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதற்கு முன்பாக பல பிரபலங்களும் தங்களது இன்ஸ்டாகிராம், எக்ஸ் (ட்விட்டர்) கணக்குகள் தான் ஹேக் செய்யப்பட்டதாக கூறியதை பார்த்து உள்ளோம். தற்போது ஆச்சரியமாக பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் மற்றும் பாகுபலி படத்தின் தயாரிப்பாளர் ஷோபு எர்லகடா ஆகியோரின் வாட்ஸ் அப் கணக்குகள் சில மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளன.
சமீபத்திய பாகுபலி தயாரிப்பாளர் ஷோபு எர்லகடா தனது எக்ஸ் வலைதளப் பக்கம் மூலமாக தனது வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தனது வாட்ஸ்அப் கணக்கும் யாராலோ ஹேக் செய்யப்பட்டுள்ளது என்றும் தயவு செய்து தன் பெயரில் ஏதேனும் மெசேஜ் வந்தால் அதை நம்பவோ பெரிதுபடுத்தவோ வேண்டாம் என்றும் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக தனது நண்பர்கள், உறவினர்கள் வட்டத்திற்கு தெரியப்படுத்தி உள்ளார். சந்தோஷ் சிவனின் உதவியாளர் வாட்ஸ்அப் கணக்கும் சேர்ந்து ஹேக் செய்யப்பட்டுள்ளது இதில் குறிப்பிடத்தக்கது.