சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

எத்தனை விதமாக தடுக்க முயற்சி செய்தாலும் நாளுக்கு நாள் முன்னேறும் தொழில்நுட்பங்கள் காரணமாக சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. பிரபலங்களை குறி வைத்து தான் விஷமிகள் இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதற்கு முன்பாக பல பிரபலங்களும் தங்களது இன்ஸ்டாகிராம், எக்ஸ் (ட்விட்டர்) கணக்குகள் தான் ஹேக் செய்யப்பட்டதாக கூறியதை பார்த்து உள்ளோம். தற்போது ஆச்சரியமாக பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் மற்றும் பாகுபலி படத்தின் தயாரிப்பாளர் ஷோபு எர்லகடா ஆகியோரின் வாட்ஸ் அப் கணக்குகள் சில மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளன.
சமீபத்திய பாகுபலி தயாரிப்பாளர் ஷோபு எர்லகடா தனது எக்ஸ் வலைதளப் பக்கம் மூலமாக தனது வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தனது வாட்ஸ்அப் கணக்கும் யாராலோ ஹேக் செய்யப்பட்டுள்ளது என்றும் தயவு செய்து தன் பெயரில் ஏதேனும் மெசேஜ் வந்தால் அதை நம்பவோ பெரிதுபடுத்தவோ வேண்டாம் என்றும் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக தனது நண்பர்கள், உறவினர்கள் வட்டத்திற்கு தெரியப்படுத்தி உள்ளார். சந்தோஷ் சிவனின் உதவியாளர் வாட்ஸ்அப் கணக்கும் சேர்ந்து ஹேக் செய்யப்பட்டுள்ளது இதில் குறிப்பிடத்தக்கது.




