என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

குறைந்த படங்களில் பணியாற்றினாலும், கவனிக்க வைக்கும் ஒளிப்பதிவை தருகிறவர்களை நட்சத்திர ஒளிப்பதிவாளர் என்பார்கள். பாலுமகேந்திரா, மது அம்பாட், பி.சி.ஸ்ரீராம் உள்ளிட்ட பல நட்சத்திர ஒளிப்பதிவாளர்கள்.
தமிழ் சினிமாவின் முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் கமல் கோஷ். இவர் மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவை சேர்ந்தவர். தமிழில் சினிமாக்கள் அதிகமாக வந்தாலும் இங்கு கதை எழுதவும், இசை அமைக்கவும், இயக்கவும் நிறைய பேர் இருந்தார்கள். ஆனால் தொழில்நுட்ப ரீதியான பணிகளுக்கு ஆட்கள் குறைவு, அதனால் மும்பை, கோல்கட்டாவில் இருந்து அழைத்து வரப்பட்டார்கள். அப்படி அழைத்து வரப்பட்டவர்களில் ஒருவர் கமல் கோஷ்.
அவரது கால்ஷீட்டிற்காக அன்றைய முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள், நடிகர்கள் காத்திருந்தார்கள். தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் பணியாற்றி உள்ளார். சில படங்களையும் இயக்கியும் உள்ளார்.
1936ம் ஆண்டு வெளியான 'பாலயோகினி' என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். 1938ம் ஆண்டு ஆர். பிரகாஷ் இயக்கிய ஜூபிடர் பிக்சர்ஸ் திரைப்படமான 'அனாதை பெண்' படத்தில் பணியாற்றினார். தொடர்ந்து இன்றளவும் ஒளிப்பதிவிற்காக நினைவு கூறப்படுகிற 'ஹரிச்சந்திரா, கச்ச தேவயானி, சந்திரலேகா, அபூர்வ சகோதரர்கள், அனார்கலி, காத்திருந்த கண்கள், அமரதீபவம்' படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் கமல் கோஷ். 'பரமோபகாரம், ரோகினி, மனோரமா' ஆகிய 3 படங்களை இயக்கினார்.
தனது வாழ்நாள் முழுக்க கண்களை பிரதானமாக கொண்டு பணியாற்றிய கமல் கோஷ் 'கிளவுகோமா' என்ற கண்நோயால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார்.