ஷாருக்கானை தொடர்ந்து சல்மான்கானுக்கு ஜோடியாகும் நயன்தாரா | ஹன்சிகா - சோஹைல் விவாகரத்து: 4 ஆண்டுகளில் முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை | லாபத்தில் பங்காக சம்பளம் : ராதிகா பெருமிதம் | விஜயும் யோசித்திருப்பார்.. திரிஷாவுக்கு வாழ்த்துகள்..: பார்த்திபன் 2வது வீடியோ | மேக்கப் போடுவதில் எனக்கு ஆர்வம் கிடையாது : சாரா அர்ஜுன் | நடிகை பாலியல் வழக்கு : கேரளா அரசு மேல்முறையீடுக்கு திலீப் உள்ளிட்ட நால்வருக்கு நோட்டீஸ் | நயன்தாரா, கவின் நடிக்கும் ஹாய் படத்தின் போஸ்டர் வெளியானது | என் அப்பா நினைவுக்கு வந்தார் : தாய் கிழவி வெற்றி விழாவில் கண் கலங்கிய சிவகார்த்திகேயன் | 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது! | ரிலீஸாகி எட்டு மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் சித்தாரே ஜமீன் பர் |

ஆரம்ப காலங்களில் ஜெமினி கணேசன் நடிப்பு வாய்ப்பிற்காக மிகவும் சிரமப்பட்டார். எம்ஜிஆர், சிவாஜியை தாண்டி அவர் போராட வேண்டியது இருந்தது. சில படங்களில் நாயனாக நடித்திருந்த நிலையில் 'கணவனே கண்கண்ட தெய்வம்' என்ற படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் பட்டன்ன நாராயண அய்யங்கார் தயாரிப்பதாக அறிவிப்பு வெளியாது.
இதற்கான நடிகர்கள் தேர்வு நடந்தபோது அதில் ஜெமினி கணேசனும் கலந்து கொண்டார். ஆனால் அவர் தேர்வாகவில்லை. படத்தின் நாயகன் சில காலங்கள் கூன்விழுந்த பிச்சைக்காரன் தோற்றத்தில் இருக்க வேண்டும், ஜெமினி கணேசன் கவர்ச்சியா இருப்பதால் அந்த தோற்றத்திற்கு அவர் பொருந்த மாட்டார் என்று கருதி நிராகரிக்கப்பட்டார்.
தயாரிப்பாளர் நாரயண அய்யங்கார் ஒரு நாள் தனது அலுவலத்தில் இருந்து வெளியே வந்தபோது கூன் விழுந்த ஒரு பிச்சைக்காரன் அவரிடம் யாசகம் கேட்டான். அய்யங்காரும் அரையணா பிச்சையிட்டார். பின்னர் அந்த பிச்சைக்காரன் வேடம் கலைத்தான் அது ஜெமினி கணேசன்.
தன்னால் கூன்விழுந்த பிச்சைக்காரனாக நடிக்க முடியும் என்பதை நிரூபிக்கவே ஜெமினி அப்படி நடந்து கொண்டார். இதை பார்த்து வியந்த நாராயண அய்யங்கார் அவரையே படத்தின் நாயகன் ஆக்கினார்.
இந்த படத்தில் ஜெமினியுடன், அஞ்சலி தேவி, லலிதா, எம்.என். நம்பியார், சித்தூர் வி. நாகையா, எம்.என். ராஜம், டி.பி. முத்துலட்சுமி மற்றும் 'நண்பர்' ராமசாமி உள்பட பலர் நடித்தனர். டி.ஆர்.ரகுநாத் இயக்கினார். படம் பெரிய வெற்றி பெற்றது. பின்னர் தெலுங்கு, இந்தி மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. ஜெமினி கேரியரில் திருப்புமுனை தந்த படமாகவும் அமைந்தது.




