மீண்டும் தனுஷூக்கு அப்பாவாக கே.எஸ்.ரவிக்குமார்! | இரண்டாவது முறையாக ஏ.எல். விஜய் படத்திற்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்! | தனுஷ் 55வது படத்தில் இணைந்த பைசன் பட பிரபலம்! | ஜீவா, எம். ராஜேஷ் படத்தில் இணைந்த இளம் நாயகி! | கர்நாடகாவில் மற்றுமொரு சாதனை படைத்த 'காந்தாரா சாப்டர் 1' | தனுஷ் 54வது படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் கொடுத்து அப்டேட் ! | சாதியை எதிர்த்துதான் நான் படம் எடுக்கிறேன்! சொல்கிறார் மாரி செல்வராஜ் | சிரஞ்சீவியின் பெயர், குரல், புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை போட்ட நீதிமன்றம்! | தகுதிக்கு உரிய சம்பளம் கேட்க தயங்குவதில்லை! - சொல்லுகிறார் பிரியாமணி | பிளாஷ்பேக்: தபால்காரர் தேர்வு செய்த தரமான பாடலுடன் வெளிவந்த “தங்கை” திரைப்படம் |

அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா 2' திரைப்படம் கடந்த வாரம் உலகம் முழுவதும் வெளியானது. ஹைதராபாத்தில் உள்ள சந்தியா 70 எம்எம் தியேட்டரில் பிரிமியர் காட்சி திரையிட்ட போது கூட்ட நெரிசலில் 39 வயது பெண் ஒருவர் மரணம் அடைந்தார். அவருடைய 13 வயது மகன் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த அகால மரணத்தைத் தொடர்ந்து சிக்கடபள்ளி போலீசார் நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் தியேட்டர் நிர்வாகத்தினர் மீது வழக்கு பதிவு செய்தனர். அந்த பிரிமியர் காட்சியில் அல்லு அர்ஜுன் படம் பார்க்க வந்த போதுதான் இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அவர் அங்கு வருவது குறித்து காவல் துறைக்கு தியேட்டர் நிர்வாகம் எந்தவிதத் தகவலும் தெரிவிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. அவ்வளவு கூட்டம் கூடுவதற்கு எந்த வித பாதுகாப்பும் செய்யப்படவில்லை என்றும் தெரிகிறது.
வழக்கு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து நேற்று சந்தியா தியேட்டரின் உரிமையாளர், மேலாளர், பாதுகாப்பு மேலாளர் ஆகியோரை சிக்கடபள்ளி போலீசார் கைது செய்தனர்.
உயிரிழந்த பெண்ணுக்கு அல்லு அர்ஜுன் 25 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்குவதாக அறிவித்திருந்தார். அல்லு அர்ஜுன் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளதால் அவரும் கைது செய்யப்படுவாரா என்பது இனிமேல்தான் தெரியும்.