2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா 2' திரைப்படம் கடந்த வாரம் உலகம் முழுவதும் வெளியானது. ஹைதராபாத்தில் உள்ள சந்தியா 70 எம்எம் தியேட்டரில் பிரிமியர் காட்சி திரையிட்ட போது கூட்ட நெரிசலில் 39 வயது பெண் ஒருவர் மரணம் அடைந்தார். அவருடைய 13 வயது மகன் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த அகால மரணத்தைத் தொடர்ந்து சிக்கடபள்ளி போலீசார் நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் தியேட்டர் நிர்வாகத்தினர் மீது வழக்கு பதிவு செய்தனர். அந்த பிரிமியர் காட்சியில் அல்லு அர்ஜுன் படம் பார்க்க வந்த போதுதான் இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அவர் அங்கு வருவது குறித்து காவல் துறைக்கு தியேட்டர் நிர்வாகம் எந்தவிதத் தகவலும் தெரிவிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. அவ்வளவு கூட்டம் கூடுவதற்கு எந்த வித பாதுகாப்பும் செய்யப்படவில்லை என்றும் தெரிகிறது.
வழக்கு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து நேற்று சந்தியா தியேட்டரின் உரிமையாளர், மேலாளர், பாதுகாப்பு மேலாளர் ஆகியோரை சிக்கடபள்ளி போலீசார் கைது செய்தனர்.
உயிரிழந்த பெண்ணுக்கு அல்லு அர்ஜுன் 25 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்குவதாக அறிவித்திருந்தார். அல்லு அர்ஜுன் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளதால் அவரும் கைது செய்யப்படுவாரா என்பது இனிமேல்தான் தெரியும்.