‛தளபதி கச்சேரி' பிளாஸ்ட் : ‛ஜனநாயகன்' முதல் பாடல் வெளியீடு | கோவா திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛அமரன்' | ஜெயிலர் 2 படத்தை பாலகிருஷ்ணா எதனால் நிராகரித்தார்? | சைபர் கிரைம் மோசடி - ருக்மணி வசந்த் எச்சரிக்கை செய்தி | 2026 பிப்ரவரியில் திரைக்கு வரும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு பாராட்டு விழா | உருவக்கேலியை ஏற்க முடியாது ; ஆதரித்தவர்களுக்கு நன்றி : கவுரி கஷன் அறிக்கை | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவை கதற வைத்த மோனிஷா உன்னி | ரிலீசுக்காக 5 வருடங்கள் காத்திருந்த படம் | லட்சுமி மேனன் மீதான ஆள்கடத்தல் வழக்கு தள்ளுபடி |

சின்னத்திரை பிரபலமான மணிமேகலை, உசேன் என்பவரை காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்டாலும் இப்போது தனது திறமையால் அடுத்தடுத்த வெற்றிபடிக்கட்டுகளில் அடியெடுத்து வைக்கிறார். சிறிது காலம் முன் சொந்தமாக பண்ணை வீட்டை கட்டி வந்த மணிமேகலை தற்போது சென்னையிலேயே சொந்தமாக ப்ரீமியம் அபார்ட்மெண்ட் வாங்கியிருக்கிறார். இதனை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள மணிமேகலை, 'திருமணமான புதிதில் வீட்டு வாடகை கொடுக்கவே கஷ்டப்பட்டோம். இன்று சென்னையில் ப்ரீமியம் அப்பார்ட்மெண்ட் வாங்கியிருக்கிறோம்' என மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து மணிமேகலை - உசேன் தம்பதியினருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.