‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
சின்னத்திரை பிரபலமான மணிமேகலை, உசேன் என்பவரை காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்டாலும் இப்போது தனது திறமையால் அடுத்தடுத்த வெற்றிபடிக்கட்டுகளில் அடியெடுத்து வைக்கிறார். சிறிது காலம் முன் சொந்தமாக பண்ணை வீட்டை கட்டி வந்த மணிமேகலை தற்போது சென்னையிலேயே சொந்தமாக ப்ரீமியம் அபார்ட்மெண்ட் வாங்கியிருக்கிறார். இதனை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள மணிமேகலை, 'திருமணமான புதிதில் வீட்டு வாடகை கொடுக்கவே கஷ்டப்பட்டோம். இன்று சென்னையில் ப்ரீமியம் அப்பார்ட்மெண்ட் வாங்கியிருக்கிறோம்' என மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து மணிமேகலை - உசேன் தம்பதியினருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.