கைதி 2வில் இணைகிறாரா அனுஷ்கா? | கத்தியை அந்தரத்தில் சுழற்றியபடி கேக் வெட்டிய பாலகிருஷ்ணா | பிரேமலு 2 தாமதம் ஏன் ? தயாரிப்பாளர் தகவல் | ராம்சரண் தயாரிக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பில் தண்ணீர் டேங்க் உடைந்து விபத்து | பிறந்தநாள் பார்ட்டியில் போதைப்பொருள் : புஷ்பா பாடகி மீது வழக்கு பதிவு | ஊர்வசி மறுத்திருந்தால் மகள் நடிகையாகி இருக்க மாட்டார் : கண் கலங்கிய மனோஜ் கே ஜெயன் | ரிவால்வர் ரீட்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | அல்லு அர்ஜுனுக்கு பதில் ஜுனியர் என்டிஆரை இயக்கும் திரி விக்ரம் | நாளை வெளியாகும் ‛குபேரா' படத்தின் டிரைலர் | ‛கூலி' படத்தின் தெலுங்கு வியாபாரம் தொடங்கியது |
கராத்தே மாஸ்டரும், நடிகருமான சிஹான் உசேனி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், சினிமாவிலும் நடித்திருக்கிறார். மிகவும் பாசிட்டிவான நபரான இவரை தமிழ்நாட்டில் பலருக்கும் பிடிக்கும். தற்காப்பு கலை பயில விரும்பும் மாணவர்களுக்கு பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார். உசேனி தற்போது ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில், அவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், ‛‛தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் டாப் நட்சத்திரங்களாகவும், இன்றைய அரசியல் ஆளுமைகளாகவும் வலம் வரும் பவன் கல்யாண் மற்றும் விஜய்யிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதில், 'மாணவர்களுக்காக நான் கட்டி வைத்திருக்கும் இந்த கலை மாளிகையை விற்று அந்த பணத்தை 8 ஆண்டுகளுக்கு மேல் என்னிடம் பயிற்சி பெறும் மாணவர்கள் ஒலிம்பிக்கில் மெடல் வாங்க பயன்படுத்த வேண்டும்.
தெலுங்கு நடிகர் மற்றும் இன்றைய துணை முதல்வரான பவன் கல்யாண் என்னுடய மாணவர் தான். ஒன்றரை வருடம் என்னிடம் பயிற்சி எடுத்துக் கொண்டார். அவர் பெயர் கல்யாண் குமார். அவருக்கு பவன் என்று பெயர் வைத்ததே நான் தான். இன்று துணை முதல்வராக இருக்கும் பவன் கல்யாண் என்னுடைய கலை மாளிகையை முடிந்தால் அவரே 11 கோடிக்கு வாங்கி கலைக்கோயிலாக மாற்ற வேண்டும்.
அதுபோல் நடிகர் விஜய்க்கும் நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன். அவர் தமிழ்நாடு முழுவதும் வீட்டுக்கொரு வில்வித்தை வீரர், வீராங்கனையை உருவாக்க வேண்டும்' என்று அந்த பேட்டியின் வாயிலாக தனது ஆசையை கூறியிருக்கிறார்.
சினிமாவில் கிடைத்த பிரபலத்தை தாண்டி, இன்று அரசியல் களமாடி வரும் இந்த இரண்டு டாப் ஸ்டார்களும், தங்களது முன்னாள் ஆசிரியரின் வேண்டுகோளை ஏற்றுக் கொள்வார்களா? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.