பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா | ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் மீண்டும் இணைந்தனர் | மீண்டும் தமிழில் நடிக்கும் அன்னாபென் | அரசன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சிவாஜி குடும்பத்தை கவுரவிக்கும் பராசக்தி படக்குழு | விஜய் தேவரகொண்டாவிற்கு வில்லன் விஜய் சேதுபதி...? | சூர்யா 47 : நெட்பிளிக்ஸ் முதலீட்டில் அமோக ஆரம்பம் ? |

சின்னத்திரை நடிகரான நேத்ரன் சில தினங்களுக்கு முன் புற்றுநோய் பாதிப்பால் காலமானார். இந்நிலையில், சக நடிகரும் நண்பருமான வருண் உதய் நேத்ரன் குறித்து உருக்கமான சில செய்திகளை கூறியிருக்கிறார். அவர் பேசியபோது, 'நேத்ரனுடன் நான் பல சீரியல்களில் இணைந்து நடித்துள்ளேன். சூட்டிங் ஸ்பாட்டில் யாரிடமும் கோபப்படமாட்டார். எப்போதும் பாசிட்டிவாக பேசுவார். அவர் ஆரம்பத்தில் ரொம்பவே கஷ்டப்பட்டார். இப்போது தான் கொஞ்சம் முன்னேறி வந்தார். நேத்ரனுக்கு சொந்த வீடு கூட கிடையாது. அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை எடுத்தார். அவருக்கு உடம்பு சரியில்லை என்று பார்க்க வருவதாக சொன்னோம். ஆனால், மறுத்துவிட்டார். ஆனால், சில தினங்களுக்கு முன் அவரது மகள் பிறந்தநாளுக்கு வீட்டுக்கு அழைத்தார். அவருக்கு உடநிலை சரியில்லாமல் இருந்தால் கூட அனைவருக்கும் மோடிவேஷ்னலாக பாசிட்டிவாக மெசேஜ் அனுப்புவார். ஆனால், அவரது மொபைலிலிருந்து அவர் காலமாகிவிட்டார் என்ற செய்தி வந்தது ரொம்பவும் வருத்தமாக இருக்கிறது' என்று கூறியிருக்கிறார்.