‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' | மனைவிக்கு ‛தடா' போட்ட சார்பட்டா நடிகர் | நடிகருக்காக சீன்களை சுடும் இயக்குனர்கள் | லாவண்யாவின் ஸ்(வரம்) | குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகி வரை: தன்னம்பிக்கையோடு தனலெட்சுமி |

சின்னத்திரை பிரபலமான மணிமேகலை, உசேன் என்பவரை காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்டாலும் இப்போது தனது திறமையால் அடுத்தடுத்த வெற்றிபடிக்கட்டுகளில் அடியெடுத்து வைக்கிறார். சிறிது காலம் முன் சொந்தமாக பண்ணை வீட்டை கட்டி வந்த மணிமேகலை தற்போது சென்னையிலேயே சொந்தமாக ப்ரீமியம் அபார்ட்மெண்ட் வாங்கியிருக்கிறார். இதனை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள மணிமேகலை, 'திருமணமான புதிதில் வீட்டு வாடகை கொடுக்கவே கஷ்டப்பட்டோம். இன்று சென்னையில் ப்ரீமியம் அப்பார்ட்மெண்ட் வாங்கியிருக்கிறோம்' என மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து மணிமேகலை - உசேன் தம்பதியினருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.