சந்தானத்தின் ‛லவ் பைட்' | ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப்போகும் துல்கர் படம் | பிளாஷ்பேக் : போலீஸாக சில்க் ஸ்மிதா | பிளாஷ்பேக் : ஒற்றைக்காலில் நடித்தே உயிர் விட்டவர் | பாடல் சர்ச்சை : மகளிர் ஆணையம் முன்பு ஆஜராகி மன்னிப்பு கேட்ட நோரா பதேகி | சல்மான்கான் - நயன்தாரா படத்தின் டைட்டில் இதுதானா ? | கொல்லப்பட்ட விலங்கு நல ஆர்வலர் : கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட பார்வதி | திரிஷ்யம் 3 படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியானது | மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் : விஜய்க்கு ஆதரவாக திரையுலகினர் குரல் | 50வது நாளில் 'யூத்' |

பிரபல சின்னத்திரை நடிகர் நேத்ரன் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.
25 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்தவர் நேத்ரன். கடைசியாக ரஞ்சிதமே தொடரில் நடித்து வந்தார். புற்றுநோய் காரணமாக சீரியலை விட்டு விலகிய அவர் கடந்த சில மாதங்களாக அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேத்ரன் நேற்று உயிரிழந்தார்.

நேத்ரனின் மனைவி தீபா ஆவார். இவர் பிரபல டிவி நடிகையாக உள்ளார். இருவரும் காதலித்து திருமணம் செய்தனர். தீபா தற்போது 'சிங்கப்பெண்ணே' உள்ளிட்ட தொடர்களில் நடிக்கிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்தவர் அபிநயா, ‛கனா காணும் காலங்கள் சீசன் 2 வெப்சீரிஸில் நடித்தார். தனது தந்தை நேத்ரனுக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதை அபிநயா தான் சில மாதங்களுக்கு முன் இன்ஸ்டாவில் அறிவித்தார். தொடர்ந்து தனது தந்தைக்கு மேற்கொண்ட சிகிச்சைகள் பற்றியும் பதிவிட்டு வந்தார்.
சில வாரங்களுக்கு முன்பு கூட சீரியல் நடிகர் வருண் உதய் மற்றும் கார்த்திக் சசிதரனுடன் டான்ஸ் ஆடியும், காமெடி ரீல்ஸ் செய்தும் வீடியோ வெளியிட்டிருந்தார் நேத்ரன். இந்நிலையில் அவரது மரண செய்தி சின்னத்திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.