மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 8 முந்தைய சீசன்களை போல் இல்லாமல் பல்வேறு விதமான புதிய விதிமுறைகளோடும், கேம்களுடனும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. 28 நாட்களை கடந்துள்ள இந்த கேம் ஷோவில் இந்த வார எவிக்சனில் அன்ஷிதா வெளியேறுவார் என பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், விஜய் சேதுபதி இந்த வாரம் எவிக்சன் கிடையாது என்று அதிரடியாக அறிவித்துவிட்டார்.
அதேசமயம் ஆறு புதிய போட்டியாளர்கள் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டில் நுழைகின்றனர். முன்னாள் போட்டியாளரான சுஜா வருணேவின் கணவர் சிவாஜி தேவ் என்ற சிவக்குமார், மாடல் ரியா தியாகராஜன், நடிகர் ராணவ், வீஜே வர்ஷினி வெங்கட், பேச்சாளர் மஞ்சரி மற்றும் தமிழும் சரஸ்வதி சீரியலின் வில்லன் நடிகர் ராயன் ஆகியோர் 28ம் நாளில் என்ட்ரி கொடுத்துள்ளனர். ஏற்கனவே சூடுபிடித்திருக்கும் பிக்பாஸ் வீட்டில் புது போட்டியாளர்கள் வருகை மேலும் ரணகளத்தை கிளப்பும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.