டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு | 'காந்தாரா சாப்டர் 1' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | இல்லாத இடத்தை குறிப்பிட்டு விளம்பரம் நடித்து சிக்கலில் சிக்கிய நடிகர் மகேஷ்பாபுவுக்கு நோட்டீஸ் | கில்லர் படத்திற்காக 4வது முறையாக இணைந்த எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.ரஹ்மான் | லிஜோவின் அப்பாவித்தனம் அவரை நாயகியாக்கியது: 'பிரீடம்' இயக்குனர் சத்யசிவா | பிளாஷ்பேக் : ஒரே படத்துடன் தமிழில் மூட்டை கட்டிய காஜல் | பிளாஷ்பேக்: அப்பாவின் நண்பருக்காக மேடையில் ஆடிய சிறுவன் கமல் |
சின்னத்திரை நடிகையான ஜெனிப்ரியா வாணி ராணி சீரியலின் மூலம் அறிமுகமாகி, சில தொடர்களிலும் படங்களிலும் நடித்துள்ளார்.
சொந்தமாக ப்யூட்டி பார்லர் வைத்திருக்கும் ஜெனி ப்ரியாவுக்கு சில வாரங்களுக்கு முன் சிங்கப்பூரை சேர்ந்த பைலட் துநேசன் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருந்த நிலையில், மாப்பிள்ளை வீட்டார் இப்போதே 100 சவரன் நகை வேண்டுமென கேட்க, ஜெனிப்ரியா முதலில் 50 சவரன் நகையை மட்டும் கொடுத்துள்ளார். இதனையடுத்து ஜெனிப்ரியாவை சிங்கப்பூர் அழைத்துச் சென்ற மாப்பிள்ளை வீட்டாரின் செயல்பாடுகளில் சில மாற்றங்கள் தெரியவே, இந்த திருமணம் வேண்டாம் என்ற முடிவுக்கு ஜெனிப்ரியா வந்துள்ளார்.
அப்போது அவர் கொடுத்த பொருட்களை எல்லாம் திருப்பி கொடுத்த மாப்பிள்ளை வீட்டார் 50 சவரன் நகை பற்றி கேட்டால் அப்படி எதுவுமே தங்களிடம் கொடுக்கவில்லை என்று குண்டை தூக்கி போட்டுள்ளனர். இதைகேட்டு அதிர்ச்சியான ஜெனிப்ரியா தற்போது துநேசன் மற்றும் குடும்பத்தார் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முயற்சி செய்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது.