எனக்கான போராட்டத்தை அமைதியாக நடத்துகிறேன்: தீபிகா படுகோனே | விருஷபா ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று வரும் சூர்யா, வெங்கி அட்லூரி படப்பிடிப்பு | டில்லி முதல்வரை சந்தித்த காந்தாரா சாப்டர் 1 படக்குழு | இங்கிலாந்து பிரதமருடன் அமர்ந்து படம் பார்த்த ராணி முகர்ஜி | 'மெண்டல் மனதில்' என் மனதுக்கு மிக நெருக்கமான படம் : ஜிவி பிரகாஷ் | அடி உதை வாங்கினேன் : ஹீரோவான பூவையார் | ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 8 முந்தைய சீசன்களை போல் இல்லாமல் பல்வேறு விதமான புதிய விதிமுறைகளோடும், கேம்களுடனும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. 28 நாட்களை கடந்துள்ள இந்த கேம் ஷோவில் இந்த வார எவிக்சனில் அன்ஷிதா வெளியேறுவார் என பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், விஜய் சேதுபதி இந்த வாரம் எவிக்சன் கிடையாது என்று அதிரடியாக அறிவித்துவிட்டார்.
அதேசமயம் ஆறு புதிய போட்டியாளர்கள் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டில் நுழைகின்றனர். முன்னாள் போட்டியாளரான சுஜா வருணேவின் கணவர் சிவாஜி தேவ் என்ற சிவக்குமார், மாடல் ரியா தியாகராஜன், நடிகர் ராணவ், வீஜே வர்ஷினி வெங்கட், பேச்சாளர் மஞ்சரி மற்றும் தமிழும் சரஸ்வதி சீரியலின் வில்லன் நடிகர் ராயன் ஆகியோர் 28ம் நாளில் என்ட்ரி கொடுத்துள்ளனர். ஏற்கனவே சூடுபிடித்திருக்கும் பிக்பாஸ் வீட்டில் புது போட்டியாளர்கள் வருகை மேலும் ரணகளத்தை கிளப்பும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.