அமெரிக்காவில் ஜாக்கி சானுடன் ஹிருத்திக் ரோஷன் சந்திப்பு | அஜித் 65வது படத்தை இயக்குவது யார்... புதிய தகவல் | பாண்டிராஜ் படத்தில் ஹரிஷ் கல்யாண்.? | மீண்டும் மோகன்லாலை இயக்கும் தருண் மூர்த்தி ; தொடரும் பட வெற்றி விழாவில் அறிவிப்பு | வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது | 2025ல் வெளியான படங்களில் 7 மட்டுமே 100 கோடி வசூல் | நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்' | பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் |

1980ல் வெளியான 'ஒரு தலை ராகம்' கதை, உருவாக்கம், பாடல், வெற்றி இவற்றில் சரித்திர சாதனை படைத்தது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் பலர் அறியாத ஒரு விஷயம் உண்டு. இந்த படத்தின் கதையை தயார் செய்த பிறகு டி.ராஜேந்தரின் பக்கத்து ஊர்காரரான இப்ராஹிடம் சொன்னார். வெளிநாட்டில் சம்பாதித்து நல்ல வசதியுடன் இருந்த இப்ராஹிமும் அந்த கதையை சினிமாவாக தயாரிக்க சம்மதித்தார். ஆனால் தீவிர ரஜினி ரசிகராக இருந்த அவர் இந்த படத்தில் ரஜினியை நடிக்க வைக்க முடியுமா என்று பாருங்கள் என்றார்.
ராஜேந்தர் சென்னை வந்து பல முயற்சிகளுக்கு பிறகு ரஜினியை சந்தித்து கதை சொன்னார். கதையை கேட்ட ரஜினிகாந்த் “அண்ணே நமக்கு இந்த காதல் கதையெல்லாம் செட்டாகாது. நல்ல அடிதடி ஆக்ஷன் கதையாக கொண்டு வாங்க நடிச்சுத் தர்றேன்” என்று கூறிவிட்டார். இதனால் ரஜினிக்கு பதில் சங்கர் நடித்தார். நாயகியாக உஷாவை நடிக்க வைக்க வேண்டும் என்பதே டி.ராஜேந்தரின் ஆசை. அப்போது வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த ராஜேந்தருக்கும், உஷாவுக்கும் ஒரு தலை ராகம் படத்திற்கு முன்பே சின்ன நட்பு இருந்தது. ஆனால் தயாரிப்பாளரின் தேர்வுதான் ரூபா.
சில படங்களுக்கு பிறகு 'உயிருள்ள வரை உஷா' படத்தை டி.ராஜேந்தர் தயாரித்து, இயக்க முடிவு செய்தபோது அதில் வரும் 'ஜெயின் ஜெயபால்' என்ற ரவுடி கேரக்டரை ரஜினிக்காக உருவாக்கினார். ஆனால் அதிலும் ரஜினி நடிக்க மறுத்து விட்டார். அதனால் அந்த கேரக்டரில் தானே நடித்தார். இப்போது அந்த படத்தை பார்த்தாலும் ஜெயின் ஜெயபால் கேரக்டரில் ரஜினி தெரிவார்.