நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்' | பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் | தனுஷ் மருமகன் நடிக்கும் அடுத்த படம்: தாத்தா கஸ்தூரிராஜா தொடங்கி வைத்தார் | சித்திரம் பேசுதடி ஹீரோயினுக்கு சாருனு பெயர் வைத்தது ஏன்? மிஷ்கின் | மீண்டும் துப்பாக்கி பயிற்சியில் இறங்கிய அஜித் | ஆபாச படத்தைக் காட்டி 2 கோடி கேட்டு மிரட்டிய நடிகை | அதிக சம்பளமா? அதிர்ச்சியான மமிதா பைஜூ | நடிகை ஆன பெண் இயக்குனர் |

தமிழ் சினிமாவில் கதாநாயகனின் அப்பா, கதாநாயகியன் அப்பா என்றாலே சில காட்சிகளில் மட்டுமே வந்து போவார்கள். அபூர்வமாக ஒரு சில படங்களில் மட்டுமே அவர்களுக்கு முக்கியத்துவமான காட்சிகள் இருக்கும். ஆனால், தான் இயக்கும் படங்களில் அப்பா கதாபாத்திரத்தை நாயகனுக்கு சமமான ஒரு கதாபாத்திரமாக உருவாக்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ்.
அவரது இயக்கத்தில் வந்த 'பரியேறும் பெருமாள்' படத்தில் நாயகன் கதிர் அப்பா கதாபாத்திரத்தில் கூத்துக் கலைஞர் வண்ணாரப்பேட்டை தங்கராஜ், 'கர்ணன்' படத்தில் நாயகன் தனுஷ் அப்பா கதாபாத்திரத்தில் பூ ராமு, 'மாமன்னன்' படத்தில் நாயகன் உதயநிதியின் அப்பா கதாபாத்திரத்தில் வடிவேலு, 'பைசன்' படத்தில் நாயகன் துருவ் விக்ரமின் கதாபாத்திரத்தில் பசுபதி ஆகியோர் நடித்திருந்தார்கள்.
ஒரு படத்தில் நாயகன் பற்றியோ, நாயகி பற்றியோ பேசப்படுவதை விடவும், அந்தப் படத்தில் மற்ற குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களைப் பற்றிய பேச்சு வரும் போது அந்தப் படங்களின் கதாபாத்திர வடிவமைப்பும் பேசப்படுகிறது. அப்படியான ஒரு தாக்கத்தை மாரி செல்வராஜின் அப்பா கதாபாத்திரங்கள் ஏற்படுத்தி இருக்கின்றன.