மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா | கதை சிக்கலில் மாட்டிய ஆஸ்கர் படம் | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் | பிளாஷ்பேக் : தியாகியாக நடித்தால் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என சொன்ன சிவாஜி | பிளாஷ்பேக் : தவறான சிகிச்சையால் மரணம் அடைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 75 வயது பவுனுதாயி ஆக ராதிகா சரத்குமார்: பட ரிலீசுக்கு முன்பே வியாபாரம் ஆன 'தாய்கிழவி' | 2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. | திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? | டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா |

குட் பேட் அக்லி படத்தின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித் குமார் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அவரது 64வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பை இன்னும் தொடங்கவில்லை. டிசம்பர் அல்லது ஜனவரியில் துவங்கலாம் என கூறப்படுகிறது.
அதற்குள் அஜித் 65வது படத்தை இயக்குவது யார் என்பது குறித்து செய்திகள் வெளியாக துவங்கிவிட்டன. அதன்படி, எப்.ஐ.ஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த் தான் அஜித் 65வது படத்தை இயக்குவதற்காக கதை கூறியுள்ளார் என்கிறார்கள். ஏனெனில், 'என்னை அறிந்தால்' படத்தில் அஜித் நடிக்கும் காலகட்டத்தில் மனு ஆனந்த் அந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார். அப்போது இருந்து இருவர்கிடையே நல்ல நட்பு உள்ளது. அதுதான் அடுத்து இந்த கூட்டணி இணைவதற்கான காரணம் என கூறப்படுகிறது.
மனு ஆனந்த் தற்போது ஆர்யா, கவுதம் கார்த்திக் உள்ளிட்டோர் நடிப்பில் ‛மிஸ்டர் எக்ஸ்' என்ற படத்தை இயக்கி உள்ளார். விரைவில் இப்படம் வெளியாக உள்ளது.