‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
ராமாயணம், அவற்றின் கிளை கதைகள் பற்றி ஏராளமான படங்கள் வந்திருக்கிறது. ஆனால் ராமர் பாலம் பற்றிய படங்கள் மிகவும் அரிது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அக்ஷய்குமார் நடிப்பில் வெளிவந்த 'ராம்சேது' படம் ராமர் பாலம் கட்டப்பட்ட விதம் குறித்து கடலுக்குள் இருக்கும் குறிப்பை தேடும் கதையாக இருந்தது.
ராமாயணம் பல வடிவங்களில் திரைப்படமாகிக் கொண்டிருந்த காலத்தில் ராமர் பாலத்தை பற்றி வந்த படம் 'சேது பந்தனம்'. ராமர் பாலம் கட்டப்பட்ட விதம் குறித்து ராமாயணத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அதையே படமாக எடுத்திருந்தனர். சீதையை மீட்பதற்காக ராவணனுக்கு எதிராக ராமன் போர் புரிந்த கதையையும் இப்படம் விவரிக்கிறது.
பி.பி.ரங்காச்சாரி ராவணனாக நடித்தார். நாட் அன்னாஜி ராவ் ராமராக நடித்தார். எம்.எஸ்.மோகனாம்பாள் ராவணனின் மனைவி மண்டோதரியாக நடித்தார். ஆஞ்சநேயராக பார்த்தசாரதி நடித்தார். இவரது நடிப்பு படத்திற்கு பெரிய பலமாக இருந்ததாக சொல்வார்கள். ராவணனால் சீதை அடைத்து வைக்கப்பட்டிருந்த அசோக வனத்தில் சீதைக்கு காவலாக நிற்கும் பேய் வேடத்தில் கே.எஸ்.அங்கமுத்து நடித்தார். பத்மநாபன் இப்படத்தை இயக்கி, தயாரித்தார். எம்.டி.பார்த்தசாரதி இசை அமைத்தார். சிதம்பரம் வைத்தியநாத சர்மா பாடல்கள் எழுதினார்.
அந்த காலகட்டங்களில், படங்களோடு நகைச்சுவை குறும்படங்களையும் இணைத்து வெளியிடுவது வழக்கம். இந்தப் படத்துடன் 'ஆசை' என்ற குறும்படத்தை இயக்கி இணைத்திருந்தார் ஆர்.பத்மநாபன். இக்குறும்படத்தில் டி.என்.கமலவேணி, புலியூர் துரைசாமி அய்யர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம் வெற்றியடைந்தது. தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படம் பற்றிய மேல் விபரங்களோ, திரைப்பட பிரதியோ இப்போது இல்லை.