நிவேதா பெத்துராஜ் திருமணம் ரத்தா...? | மாப்பிள்ளை அவர்தான் ஆனால்.. என்கிற பாணியில் நடிகை வழக்கில் கருத்து தெரிவிக்கும் மலையாள நட்சத்திரங்கள் | பெப்காவில் திலீப்பை சேர்க்க முயற்சி ; ராஜினாமா செய்த பெண் டப்பிங் கலைஞர் | தக்க சமயத்தில் உதவி செய்வதில் சூர்யா எம்ஜிஆர் மாதிரி : விநியோகஸ்தர் சக்திவேலன் | அமெரிக்காவில் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு | பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு |

அஜித் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை. இதனை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அவர் தொடர்ந்து கார் பந்தயங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சர்வதேச போட்டியில் முக்கிய கவனம் பெற்று வரும் அஜித்தின் அணி, அதில் அடுத்த கட்டத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் அஜித் மீண்டும் தமிழ்நாட்டில் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொண்டு இருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தினாலும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. தற்போது கார் பந்தயங்களுக்கு இடைவெளி விட்டு இருப்பதால் இந்த நேரத்தில் துப்பாக்கி பயிற்சி அவர் மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது கொங்கு நாடு ரைபிள் கிளப் நிறுவனர் கே.எஸ்.செந்தில் குமாருடன் இணைந்து, திருப்பூர் வெள்ளக்கோவில் பகுதியிலுள்ள கேஆர்சி பயரிங் ரேஞ்சில் துப்பாக்கி சுடும் பயிற்சியை மேற்கொண்டார். இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.