மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா | கதை சிக்கலில் மாட்டிய ஆஸ்கர் படம் | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் | பிளாஷ்பேக் : தியாகியாக நடித்தால் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என சொன்ன சிவாஜி | பிளாஷ்பேக் : தவறான சிகிச்சையால் மரணம் அடைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 75 வயது பவுனுதாயி ஆக ராதிகா சரத்குமார்: பட ரிலீசுக்கு முன்பே வியாபாரம் ஆன 'தாய்கிழவி' | 2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. | திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? | டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா |

அஜித் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை. இதனை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அவர் தொடர்ந்து கார் பந்தயங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சர்வதேச போட்டியில் முக்கிய கவனம் பெற்று வரும் அஜித்தின் அணி, அதில் அடுத்த கட்டத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் அஜித் மீண்டும் தமிழ்நாட்டில் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொண்டு இருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தினாலும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. தற்போது கார் பந்தயங்களுக்கு இடைவெளி விட்டு இருப்பதால் இந்த நேரத்தில் துப்பாக்கி பயிற்சி அவர் மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது கொங்கு நாடு ரைபிள் கிளப் நிறுவனர் கே.எஸ்.செந்தில் குமாருடன் இணைந்து, திருப்பூர் வெள்ளக்கோவில் பகுதியிலுள்ள கேஆர்சி பயரிங் ரேஞ்சில் துப்பாக்கி சுடும் பயிற்சியை மேற்கொண்டார். இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.