25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
நடிகர் திலகம் சிவாஜி 'நவராத்திரி' படத்தில் 9 வேடத்தில் நடித்தார். கமல்ஹாசன் 'தசாவதாரம்' படத்தில் 10 வேடத்தில் நடித்தார். ஆனால் இவர்களுக்கெல்லாம் முன்பே 1941ல் பி.யூ.சின்னப்பா 'ஆர்யமாலா' என்ற படத்தில் 10 வேடங்களில் நடித்தார். இந்த படம் பெரிய வெற்றி பெற்றது.
இதில் சின்னப்பா ஜோடியாக எம்.எஸ்.சரோஜினி நடித்தார். இவர்களுடன் என்.எஸ்.கிருஷ்ணன், டி.எஸ்.பாலையா, டி.ஏ.மதுரம் உள்ளிட்டோர் நடித்தனர். பொம்மன் இரானி இயக்க, பக்ஷிராஜா பிலிம்ஸ் சார்பில் சின்னப்பாவே தயாரித்திருந்தார். காத்தவராயன், ஆர்யமாலாவின் புகழ்பெற்ற காதல் தான் படத்தின் கதை. பின்னர் மீண்டும் இதே படம் சிவாஜி நடிக்க 'காத்தவராயன்' என்ற பெயரில் தயாராகி 1958ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது.
பி.யூ.சின்னப்பாதான் முதன் முறையாக 'உத்தமபுத்திரன்' படத்தில் இரண்டு வேடங்களில் நடித்தார். 'மங்கையர்கரசி' படத்தில் முதன் முறையாக 3 வேடங்களில் நடித்தார். இன்று பி.யூ.சின்னப்பாவின் 73வது நினைவுநாள்.