பிளாஷ்பேக் : 10 வேடங்களில் நடித்த முதல் நடிகர் | ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் செய்த ரகளை! தேவரா படவிழா ரத்து!! | யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்! - இயக்குனர் ஷங்கர் எச்சரிக்கை | சுயமரியாதை முக்கியம்... என்னிடம் மன்னிப்பு கேளுங்க : விஜய் படம் குறித்த வதந்திக்கு சிம்ரன் கடும் பதிலடி | எல்லை மீறும் இளசுகள்: தீயாய் பரவும் திரிஷா 'ஏஐ' வீடியோ | பிளாஷ்பேக் : குழந்தையாக வந்தார், சிறுமியாக மறைந்தார் : மின்னி மறைந்த ஷோபா வாழ்க்கை | கதையின் நாயகனாக விநாயகன் ; வில்லனாக மம்முட்டி | கவியூர் பொன்னம்மாவின் மறைவும் மஞ்சு வாரியரின் நிறைவேறாத ஆசையும் | செப்டம்பர் 27ல் நான்கு முனைப் போட்டி | 'ஜானு பாப்பா' என அழைக்கும் ரசிகர்கள் : ஜான்வி கபூர் மகிழ்ச்சி |
நடிகர் திலகம் சிவாஜி 'நவராத்திரி' படத்தில் 9 வேடத்தில் நடித்தார். கமல்ஹாசன் 'தசாவதாரம்' படத்தில் 10 வேடத்தில் நடித்தார். ஆனால் இவர்களுக்கெல்லாம் முன்பே 1941ல் பி.யூ.சின்னப்பா 'ஆர்யமாலா' என்ற படத்தில் 10 வேடங்களில் நடித்தார். இந்த படம் பெரிய வெற்றி பெற்றது.
இதில் சின்னப்பா ஜோடியாக எம்.எஸ்.சரோஜினி நடித்தார். இவர்களுடன் என்.எஸ்.கிருஷ்ணன், டி.எஸ்.பாலையா, டி.ஏ.மதுரம் உள்ளிட்டோர் நடித்தனர். பொம்மன் இரானி இயக்க, பக்ஷிராஜா பிலிம்ஸ் சார்பில் சின்னப்பாவே தயாரித்திருந்தார். காத்தவராயன், ஆர்யமாலாவின் புகழ்பெற்ற காதல் தான் படத்தின் கதை. பின்னர் மீண்டும் இதே படம் சிவாஜி நடிக்க 'காத்தவராயன்' என்ற பெயரில் தயாராகி 1958ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது.
பி.யூ.சின்னப்பாதான் முதன் முறையாக 'உத்தமபுத்திரன்' படத்தில் இரண்டு வேடங்களில் நடித்தார். 'மங்கையர்கரசி' படத்தில் முதன் முறையாக 3 வேடங்களில் நடித்தார். இன்று பி.யூ.சின்னப்பாவின் 73வது நினைவுநாள்.