'புஷ்பா 2' ரிலீஸ், மீண்டும் உறுதி செய்த படக்குழு | பிளாஷ்பேக் : 10 வேடங்களில் நடித்த முதல் நடிகர் | ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் செய்த ரகளை! தேவரா படவிழா ரத்து!! | யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்! - இயக்குனர் ஷங்கர் எச்சரிக்கை | சுயமரியாதை முக்கியம்... என்னிடம் மன்னிப்பு கேளுங்க : விஜய் படம் குறித்த வதந்திக்கு சிம்ரன் கடும் பதிலடி | எல்லை மீறும் இளசுகள்: தீயாய் பரவும் திரிஷா 'ஏஐ' வீடியோ | பிளாஷ்பேக் : குழந்தையாக வந்தார், சிறுமியாக மறைந்தார் : மின்னி மறைந்த ஷோபா வாழ்க்கை | கதையின் நாயகனாக விநாயகன் ; வில்லனாக மம்முட்டி | கவியூர் பொன்னம்மாவின் மறைவும் மஞ்சு வாரியரின் நிறைவேறாத ஆசையும் | செப்டம்பர் 27ல் நான்கு முனைப் போட்டி |
சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், பஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'புஷ்பா 2'. இப்படத்தை முதலில் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், படத்தின் படப்பிடிப்பு முடியவில்லை என்பதால் படத்தை டிசம்பர் மாதம் 6ம் தேதி வெளியிடுகிறோம் என தள்ளி வைத்தார்கள்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக இப்படம் குறித்து பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகின. இயக்குனர் சுகுமார், படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நின்று விட்டது என்றும் செய்திகள் வெளியாகின. அதனால், படம் அடுத்த வருடத்திற்குக் கூட தள்ளிப் போக வாய்ப்பிருக்கிறது என்றார்கள்.
இதனிடையே, சற்று முன் படம் பற்றிய புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டார்கள். படம் வெளியாக இன்னும் 75 நாட்கள் இருக்கிறது என்பதற்கான அறிவிப்பு அது. இதன் மூலம் பட வெளியீடு குறித்து மீண்டும் உறுதி செய்துள்ளது படக்குழு.