நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

பிற்காலத்தில் அம்பிகா - ராதா, ஊர்வசி - கல்பனா சகோதரிகள் இணைந்து பல படங்களில் நடித்தார்கள். ஆனால் முதன் முதலாக 3 சகோதரிகள் இணைந்து நடித்த படம் 'சிங்காரி'. 1951ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தை டி.ஆர்.ரகுநாத் இயக்கி இருந்தார். நேஷனல் புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்தது. இது சிக்கலான திரைக்கதையை கொண்ட காமெடி படம். மக்களின் வரவேற்பையும் பெற்றது.
'திருவிதாங்கூர் சகோதரிகள்' என்ற பெயரில் சினிமாவில் அறிமுகமாகி நடனம் ஆடி வந்தவர்கள் லலிதா, பத்மினி, ராகினி சகோதரிகள், இவர்களில் பத்மினி முதலில் நடிகை ஆனார், லலிதா அதன் பிறகு அறிமுகமாகி ஒரு சில படங்களில் நடித்தார். ராகினி ஏராளமான படங்களில் நடித்தபோதும் தமிழில் நாயகியாக நடிக்கவில்லை.
இவர்கள் மூன்று பேரும் இணைந்து பல படங்களில் ஆடி உள்ளனர். ஆனால் இணைந்து நடித்த படம் 'சிங்காரி'. இதில் டி.ஆர்.ராமச்சந்திரன் ஜோடியாக பத்மினியும், எஸ்.வி.சகஸ்ரநாமம் ஜோடியாக லலிதாகவும், டி.ஆர்.ராமச்சந்திரன் ஜோடியாக ராகினியும் நடித்தார்கள். இவர்கள் தவிர டி.பாலசுப்ரமணியம், வி.கே.ராமசாமி, சி.வி.நாயகம், சி.எஸ்.பாண்டியன், 'காகா' ராதாகிருஷ்ணன், கே.ஏ.தங்கவேலு, என்.ஆர்.லீலா, எம்.ஆர்.லீலா, எம். பாக்யம் ஆகியோரும் நடித்தார்கள்.