25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
இந்தியன் -2 படத்தை அடுத்து தற்போது ராம்சரண் நடிப்பில் 'கேம் சேஞ்சர்' என்ற படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். இந்த படத்தை அடுத்து சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி என்ற நாவலை மையமாக வைத்து தனது அடுத்த படத்தை இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளார் ஷங்கர். அதற்கான உரிமையை வாங்கி வைத்திருக்கிறார். ஆனால் இந்த நேரத்தில் அந்த நாவலின் காட்சிகளை தழுவி சில படங்களில் காட்சிகள் இடம் பெற்று வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதன் காரணமாகவே தனது சோசியல் மீடியாவில் அவர் ஒரு எச்சரிக்கை செய்தி வெளியிட்டுள்ளார். அதில், ''சு.வெங்கடேசன் அவர்களின் புகழ்பெற்ற தமிழ் நாவல் 'நவயுக நாயகன் வேள் பாரி'யின் பதிப்புரிமையை பெற்றுள்ளேன். ஆனால் இந்த நாவலின் முக்கிய காட்சிகள் அனுமதி இல்லாமல் சில படங்களில் பயன்படுத்தப்படுவதை பார்த்து வருத்தமாக உள்ளது. சமீபத்தில் வெளியான ஒரு திரைப்படத்தின் டிரைலரில் வேள்பாரி நாவலின் முக்கியமான காட்சிகள் திருடப்பட்டு பயன்படுத்தப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.
தயவு செய்து இந்த நாவலின் காட்சிகளை திரைப்படங்கள், வெப் சீரிஸ் மற்றும் எந்த ஒரு ஊடகத்திலும் பயன்படுத்த வேண்டாம். படைப்பாளிகளின் உரிமையை மதியுங்கள். அனுமதியின்றி காட்சிகளை தழுவி எடுக்க வேண்டாம். அப்படி யாராவது எடுத்தால் சட்டப்படி நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி வரும்,'' என்று இயக்குனர் ஷங்கர் அந்த பதிவில் தெரிவித்து இருக்கிறார்.