யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்! - இயக்குனர் ஷங்கர் எச்சரிக்கை | சுயமரியாதை முக்கியம்... என்னிடம் மன்னிப்பு கேளுங்க : விஜய் படம் குறித்த வதந்திக்கு சிம்ரன் கடும் பதிலடி | எல்லை மீறும் இளசுகள்: தீயாய் பரவும் திரிஷா 'ஏஐ' வீடியோ | பிளாஷ்பேக் : குழந்தையாக வந்தார், சிறுமியாக மறைந்தார் : மின்னி மறைந்த ஷோபா வாழ்க்கை | கதையின் நாயகனாக விநாயகன் ; வில்லனாக மம்முட்டி | கவியூர் பொன்னம்மாவின் மறைவும் மஞ்சு வாரியரின் நிறைவேறாத ஆசையும் | செப்டம்பர் 27ல் நான்கு முனைப் போட்டி | 'ஜானு பாப்பா' என அழைக்கும் ரசிகர்கள் : ஜான்வி கபூர் மகிழ்ச்சி | பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா |
இந்தியன் -2 படத்தை அடுத்து தற்போது ராம்சரண் நடிப்பில் 'கேம் சேஞ்சர்' என்ற படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். இந்த படத்தை அடுத்து சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி என்ற நாவலை மையமாக வைத்து தனது அடுத்த படத்தை இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளார் ஷங்கர். அதற்கான உரிமையை வாங்கி வைத்திருக்கிறார். ஆனால் இந்த நேரத்தில் அந்த நாவலின் காட்சிகளை தழுவி சில படங்களில் காட்சிகள் இடம் பெற்று வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதன் காரணமாகவே தனது சோசியல் மீடியாவில் அவர் ஒரு எச்சரிக்கை செய்தி வெளியிட்டுள்ளார். அதில், ''சு.வெங்கடேசன் அவர்களின் புகழ்பெற்ற தமிழ் நாவல் 'நவயுக நாயகன் வேள் பாரி'யின் பதிப்புரிமையை பெற்றுள்ளேன். ஆனால் இந்த நாவலின் முக்கிய காட்சிகள் அனுமதி இல்லாமல் சில படங்களில் பயன்படுத்தப்படுவதை பார்த்து வருத்தமாக உள்ளது. சமீபத்தில் வெளியான ஒரு திரைப்படத்தின் டிரைலரில் வேள்பாரி நாவலின் முக்கியமான காட்சிகள் திருடப்பட்டு பயன்படுத்தப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.
தயவு செய்து இந்த நாவலின் காட்சிகளை திரைப்படங்கள், வெப் சீரிஸ் மற்றும் எந்த ஒரு ஊடகத்திலும் பயன்படுத்த வேண்டாம். படைப்பாளிகளின் உரிமையை மதியுங்கள். அனுமதியின்றி காட்சிகளை தழுவி எடுக்க வேண்டாம். அப்படி யாராவது எடுத்தால் சட்டப்படி நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி வரும்,'' என்று இயக்குனர் ஷங்கர் அந்த பதிவில் தெரிவித்து இருக்கிறார்.