2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

சூர்யா நடித்து வெளிவந்த 'கங்குவா' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஹிந்தி நடிகை திஷா பதானி. அவருக்கு உத்தரபிரதேச மாநிலம் பரேலி-யில் வீடு உள்ளது. நேற்று இரவு அவரது வீட்டில் துப்பாக்கிச் சூடு நடந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்து சாமியார்கள் பிரேமானந்த் மகாராஜ், அனிருத்தாச்சார்யா மகாராஜ் ஆகியோர் குறித்து திஷா பதானியின் சகோதரி குஷ்பு பதானி தெரிவித்த கருத்துக்களால் இது நிகழ்ந்ததாகத் தெரிகிறது. தாங்கள்தான் துப்பாக்கிச் சூடு நடத்தினோம் என ரோகித் கோல்டி பிரார் குரூப் அதற்கு பொறுப்பேற்றுள்ளது.
மேலும் இது குறித்து அவர்கள் வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவில், திஷா பதானி, அவரது சகோதரி சனாதன தர்மத்தை இழிவுபடுத்த முயன்றார். நமது தெய்வங்களின் அவமானத்தை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம். இது வெறும் டிரைலர்தான். அடுத்த முறை அவர் அல்லது அவரது வீட்டில் உள்ள ஒருவரும் உயிருடன் இருக்க மாட்டார்கள். இந்த செய்தி அவருக்கு மட்டுமல்ல திரைப்படத் துறையின் அனைத்து கலைஞர்களுக்கும் தான். எதிர்காலத்தில் இப்படி நம் மதம் பற்றி அவமானமாகப் பேசினால் அதன் விளைவுகளுக்கு அவர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
குஷ்பு பதானி இந்திய ராணுவத்தில் 10 வருடங்கள் பணியாற்றியவர். மேஜர் ஆக இருந்தவர். ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர் உடல்நலன் சார்ந்த கோச் ஆகவும் சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார்.
லிவ் இன் உறவு பற்றி அனிருத்தாச்சார்யா தெரிவித்த கருத்துக்கு எதிராக வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.