25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
தமிழ் சினிமாவில் 2 கே கால கட்டங்களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் சிம்ரன். அவரும் விஜய்யும் ஜோடி சேர்ந்து நடனமாடினால் அது அசத்தலாக இருக்கும் என்பது இன்று வரையிலும் பேசப்படும் ஒன்று. இருவரும் இணைந்து “துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே, யூத் (ஒரு பாடல் மட்டும்), உதயா,” ஆகிய படங்களில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர்.
இதனிடையே, சிம்ரன் அவருடைய தயாரிப்பு நிறுவனத்திற்காக படம் நடித்துத் தர விஜய்யிடம் கேட்டதாகவும், விஜய் அடுத்து நடிக்க உள்ள 69வது படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் பரவியது. அது குறித்து தெரிய வந்தபின் சமூக வலைத்தளத்தில் தனது கடும் பதிலடியைப் பதிவு செய்துள்ளார் சிம்ரன்.
“உணர்வுகள் மற்றும் மனரீதியாக ஒருவரை பாதிக்க செய்யும் வகையில் சிலர் பேசுவதை பார்க்கும் போது உண்மையில் வருத்தம் அளிக்கிறது. இப்போது வரை நான் அமைதியாகவே இருக்கிறேன், ஆனால் நான் சில விஷயங்களை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். நான் எந்த பெரிய ஹீரோக்களுடனும் இணைந்து பணியாற்ற ஆசைப்படவில்லை. கிடைத்த வாய்ப்புகளை செய்திருக்கிறேன். எனது இலக்குகள் எப்போதும் வேறுபட்டவை. ஒரு பெண்ணாக, எனது எல்லைகளை நான் அறிவேன்.
பல ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் எனது பெயரை வேறு ஒருவருடன் இணைத்து பேசும்போது நான் அமைதியாகவே இருந்தேன். ஆனால் சுயமரியாதை இங்கு முதலில் வருகிறது. 'நிறுத்து' என்பது ஒரு சக்தி வாய்ந்த வார்த்தை. அது இங்கே பயன்படுத்துவது சரியானது. இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க யாரும் முயற்சிக்கவில்லை. என் உணர்வுகளைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை.
நான் என் பெயரைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. நான் எப்போதும் சரியானவற்றில் உறுதியாக நின்றேன். இத்துறையில் உள்ள விவேகமானவர்களிடம் இருந்தும் அதே நேர்மையை எதிர்பார்க்கிறேன். பொய்யான வதந்திகளைப் பரப்புபவர்கள் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்,” என கடுமையாகப் பதிவு செய்துள்ளார்.