தக் லைப் குறித்த கேள்விக்கு கலகலப்பாக பதிலளித்த கமல்ஹாசன் | புஷ்பா 2வில் பெண் வேடத்தில் நடிக்க பயந்த அல்லு அர்ஜுன் | ஜெயம் ரவியை தொடர்ந்து பெயரை மாற்றிய கவுதம் கார்த்திக் | கும்பமேளாவில் வெளியிடப்பட்ட தமன்னாவின் ஓடேலா 2 டீசர் | நாதஸ்வரம் சீரியல் நடிகை ஸ்ரித்திகா வளைகாப்பு : வாழ்த்திய பிரபலங்கள் | மணிரத்னம் இயக்கத்தில் நவீன் பொலிஷெட்டி | கமல் சார் படங்களை 30, 40 முறைக்கு மேல பார்த்திருக்கேன் - த்ரிஷா | ராம் கோபால் வர்மாவின் 'சாரி' : 28ம் தேதி வெளியாகிறது | தமிழ் படங்களில் நடிக்க தமிழ் கற்று வரும் கன்னட நடிகை | அரசுகள் தொழில்நுட்ப வளர்ச்சியை கட்டுப்படுத்த கூடாது : கமல்ஹாசன் கோரிக்கை |
தெலுங்கு சினிமாவின் முன்னணி குணசித்ர நடிகை ஹேமா. தமிழில் ஈரமான ரோஜாவே, அழகிய தமிழ்மகன், சத்யம், சாகசம், தேவி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் பெங்களூரில் உள்ள ஒரு ரெசார்ட்சில் போதை பார்ட்டி நடப்பதாக போலீசுக்கு வந்த தகவலை தொடர்ந்து போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் 100க்கும் மேற்பட்டவர்கள் போதை மருந்து உட்கொண்டதாக கைது செய்யப்பட்டனர். அவர்களில் சில தெலுங்கு, மற்றும் கன்னட சினிமாவின் துணை நடிகர், நடிகைகளும் இருந்தனர்.
இந்த போதை விருந்துக்கு ஏற்பாடு செய்தவர் தெலுங்கு நடிகை ஹேமா என்று கூறப்பட்டது. இதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து ஹேமா தெலுங்கு நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டதோடு, அவர் படங்களில் நடிக்கவும் தடை விதிக்கப்பட்டது.
சில நாட்களுக்கு பிறகு ஜாமீனில் விடுதலையான ஹேமா நான் எந்த போதை விருந்தையும் ஏற்பாடு செய்யவில்லை. போதை பொருள் பயன்படுத்தும் பழக்கமும் தனக்கு இல்லை. தெலுங்கு நடிகர் சங்கம் சரியாக விசாரிக்காமல் அவசரக்கோலத்தில் தனக்கு தடை விதித்திருப்பதாக கூறினார். அதோடு இதுகுறித்து தெலுங்கு நடிகர் சங்கத்திற்கு கடிதம் எழுதினார். அத்துடன் போதை மருந்து அருந்தவில்லை என்ற மருத்துவ சான்றிதழையும் அனுப்பி வைத்தார். அவர் அனுப்பிய ஆதாரங்களை பரிசீலனை செய்த தெலுங்கு நடிகர் சங்க செயற்குழு ஹேமா மீது விதித்து இருந்த தடையை நீக்குவதாக அறிவித்தது.