பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

கடந்த 1998ம் ஆண்டு நடிகர் சல்மான்கான் மீது மான்வேட்டை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதையடுத்து பிஷ்னோய் என்ற சமூகத்தைச் சார்ந்தவர்கள் தாங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதும் கருப்பு நிற மான்களை சல்மான்கான் வேட்டையாடியதால் அவருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள்.
கடந்த ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி சல்மான்கான் வீட்டின் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட நிலையில், இன்றும் அதே போன்று மீண்டும் ஒரு துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. இன்று அதிகாலை தூங்கிக் கொண்டிருந்தபோது பட்டாசு வெடிப்பது போன்ற சத்தம் கேட்டதாக மும்பை போலீசில் தெரிவித்திருக்கும் சல்மான்கான், தனது குடும்பத்தாரை கொலை செய்ய திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். அவரது காரில் வெடிகுண்டு வைத்து தகர்ப்போம் என மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து அவரது குடும்பத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.