சூர்யாவின் 'கருப்பு': விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'டாக்சிக்' தெலுங்கு வியாபாரம் 120 கோடி உண்மையா? | வாரணாசி வெளிநாட்டு உரிமை தான் ராஜமவுலியின் சம்பளம்? | ஆபாச தாக்குதல் : ஈஷா ரெப்பா போலீஸில் புகார் | மூன்றாம் பாகத்தோடு திரிஷ்யம் முடிவடைகிறது : ஜீத்து ஜோசப் | துரந்தர் 2 படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த விக்கி கவுசல், யாமி கவுதம் | யூத் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது | அதர்வா இரு வேடங்களில் நடிக்கும் ‛வலை' | 2 கோடி வசூலுக்கு 30 லட்சம் கணக்கு சொன்ன வினியோகஸ்தர் : ஆர்கே செல்வமணி அதிர்ச்சித் தகவல் | ‛ஊருக்கு ரெண்டு ஊதாரி' என்ன மாதிரியான படம் |

இந்தியாவின் 'முதல் மகாத்மா' என்று அழைக்கப்படும், ஜோதிராவ் பூலே மற்றும் சாவித்ரிபாய் பூலே ஆகியோரின் வாழ்க்கை வரலாறு 'பூலே' என்ற திரைப்படமாக தயாராகி உள்ளது. இந்த படம் கடந்த 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருந்தது. இப்படத்தை இயக்குநர் ஆனந்த் மகாதேவன் இயக்கியிருந்தார்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிராமண சமூகத்தினர் இத்திரைப்படத்தில் அவர்களை தவறாக சித்தரித்திருப்பதாக கூறி படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்தப் படத்திற்கு தணிக்கை வாரியம் ‛யூ' சான்றிதழ் வழங்கியிருந்தது. பிறகு படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் படத்தில் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று தணிக்கை குழு, படக்குழுவினருக்கு உத்தரவிட்டிருந்தது. அதோடு சாதி குறித்தான உரையாடலைக் கொண்ட வாய்ஸ் ஓவரையும், சாதிய அமைப்பை விளக்கும் காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் தணிக்கை வாரியம் கூறியிருக்கிறது. படத்தில் சில வசனங்களையும் மாற்றச் சொல்லியிருக்கிறார்கள்.
இதனால் படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகவில்லை, இது குறித்து படத்தில் இயக்குனர் ஆனந்த் மகாதேவன் கூறும்போது, ''படத்தின் டிரைலர் பற்றி சில தவறான புரிதல்கள் இருக்கிறது. படத்தைப் பார்ப்பதில் எந்த தொந்தரவும் இருக்காது, என்றாலும் சில சந்தேகங்களை அகற்ற வேண்டியது இருக்கிறது." என்கிறார்.