சிவாஜி வீடு பிரபுவிற்கு சொந்தம் : வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவு ரத்து | பிளாஷ்பேக்: மேடை நாடகம், வெள்ளித்திரை இரண்டிலும் முத்திரை பதித்த “வியட்நாம் வீடு” | இப்போதைக்கு நான் சாக விரும்பவில்லை : விரக்தியில் பிரபல பாடகர் | நாகசைதன்யா நடிக்கும் புதிய வெப்சீரிஸ் ‛மாய சபா' | தொடரும் வில்லத்தனம் : வெளியான மம்முட்டியின் கலம்காவல் இரண்டாவது லுக் | மோகன்லாலுக்கு பரிசாக கால்பந்து வீரர் மெஸ்ஸி கையெழுத்திட்டு அனுப்பிய ஜெர்ஸி | மலையாள வில்லன் நடிகர் மீதான போதை வழக்கில் போலீசாருக்கு புதிய சிக்கல் | மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணியில் ஏஆர் ரஹ்மான் | குட் பேட் அக்லி 11 நாள் வசூல் முழு விவரம் | காதலருடன் (?) திருப்பதியில் தரிசனம் செய்த சமந்தா |
நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த 10 வருடங்களில் சினிமாவில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளதுடன் பக்கத்து மாநிலமான கேரளாவில் விஜய், அஜித், சூர்யாவுக்கு அடுத்தபடியாக மிகவும் வரவேற்பை பெற்ற நடிகராகவும் மாறிவிட்டார். அதனால் தனது படங்களின் கேரள புரமோசன்களில் கூட மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். இதில் ஒரு படி மேலே போய் அவருக்கு புதிய ஒரு கவுரவமாக கேரள முதல்வரின் சொந்த ஊரான கண்ணூர் மாவட்டம் பினராயி கிராமத்தில் நடைபெற்ற பினராயி பெருமா என்கிற கலை மற்றும் கலாசார விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தார் சிவகார்த்திகேயன்.
இந்த நிகழ்வில் கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் அருகில் அமர்ந்து இந்த நிகழ்ச்சியை கண்டு களித்தார் சிவகார்த்திகேயன். மேலும் இந்த நிகழ்வில் அவர் பேசும்போது, ''இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாக முதல் நாள் எனக்கு கேரள முதல்வரின் வீட்டில் விருந்துக்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது, நான் கூட அங்கே போனதும் ஏதோ நம்மை ஒரு தனி அறையில் அமர வைத்து விருந்து பரிமாறுவார்கள் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அங்கே முதல்வர் உள்ளிட்ட மொத்த குடும்பமும் எனக்காக காத்திருந்து வரவேற்று என்னுடன் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்திய அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது'' என்று பேசினார்.
அது மட்டுமல்ல இந்த விழாவில் கலந்து கொண்டு ஊர் திரும்பிய சிவகார்த்திகேயன், “பினராயி பெருமா கலை மற்றும் கலாசார விழாவில் கேரள முதல்வரின் அழைப்பின் பெயரில் கலந்து கொண்டது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. முதல்வர் மற்றும் அமைச்சர் பெருமக்களுடன் மேடையை பகிர்ந்து கொண்டதும் கேரள மக்களின் அன்பும் அரவணைப்பும் என்னை மிகவும் மகிழ்ச்சி அடையச் செய்தது. இந்த மறக்க முடியாத நினைவுகளுக்கு நன்றி” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.