மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை | நான் அடிக்கடி ரசிக்கும் காமெடி எது தெரியுமா? ஆர்.கே. செல்வமணி | இந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்களுக்குள் இவ்வளவு ஒற்றுமையா? |
மெர்சல், மாநாடு, மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என பல படங்களில் வில்லனாக நடித்த எஸ்.ஜே.சூர்யா தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தியன்-2, கேம் சேஞ்சர் மற்றும் ராயன் போன்ற படங்களிலும் வில்லனாக நடித்திருக்கிறார். இந்த நிலையில் தற்போது அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் குட் பேட் அக்லி படத்திலும் அவர் நடித்து வருவதாக செய்திகள் வெளியாகி வந்தன.
இந்த நிலையில், இந்தியன்-2 படத்தின் புரமோஷனில் இருந்த எஸ்.ஜே.சூர்யா அது குறித்து கூறுகையில், குட் பேட் அக்லி படத்தில் நடிப்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை. அது குறித்த பேச்சுவார்த்தை முடிந்த பிறகு தான் அந்த படத்தில் நான் நடிக்கிறேனா இல்லையா என்பது தெரியவரும் என்று ஒரு தகவல் வெளியிட்டு இருக்கிறார். மேலும், அஜித் நடித்த வாலி படம்தான் எஸ்.ஜே.சூர்யா இயக்கிய முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.