கரகாட்டக்காரன் 2 நடக்குமா.... : கங்கை அமரன் பதில் | 41 கோடிக்கு விற்பனையான துல்கர் சல்மான் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்! | தெலுங்கு படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு தளத்தில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்! | 24 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'மௌனம் பேசியதே': சூர்யா வெளியிட்ட வீடியோ!! | இளையராஜா பயோபிக் படம் டிராப்பா... : படக்குழு வெளியிட்ட தகவல் | 3 நாளில் ரூ.11 கோடி வசூலித்த ‛வித்லவ்' | தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு தேர்தல்: செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு போட்டியின்றி தேர்வு | பராசக்தி வெற்றி படமா? | சரத்குமாரின் ‛ஆழி' படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ரசூல்பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார் | ஜனநாயகன் படம் மறு தணிக்கை செல்கிறது : வழக்கை வாபஸ் பெற மனு |

தமிழில் தற்போது வில்லன், குணச்சித்திர நடிகர் என மாறி மாறி பயணித்துக் கொண்டிருப்பவர் எஸ்ஜே சூர்யா. நானி நடித்துள்ள 'சரிபோத சனிவாரம்' என்ற படத்தில் வில்லத்தனமான இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் எஸ்ஜே சூர்யா நடித்துள்ளார். இப்படம் தமிழிலும் டப்பிங் ஆகி வெளியாக உள்ளது.
இப்படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது எஸ்ஜே சூர்யா, கதை எழுதி இயக்க முடியாமல் போன பவன் கல்யாண் படம் ஒன்றைப் பற்றிய தகவலைப் பகிர்ந்து கொண்டார்.
தமிழில் விஜய், ஜோதிகா நடித்து வெளிவந்து வெற்றி பெற்ற 'குஷி' படத்தை அதே பெயரில் தெலுங்கில் பவன் கல்யாண், பூமிகா நடிப்பில் ரீமேக் செய்து இயக்கினார் எஸ்ஜே சூர்யா. அப்படம் தெலுங்கிலும் பெரிய வெற்றியைப் பெற்றது. பவன் கல்யாணின் முக்கியமான படங்களில் அந்தப் படத்திற்கும் ஒரு இடமுண்டு. அதன்பின் பவன் கல்யாண் நடித்த 'கொமரம் புலி' என்ற படத்தை இயக்கினார் சூர்யா. ஆனால், அது தோல்விப் படமாக அமைந்தது.
அதற்கடுத்து பவன் கல்யாணுக்காகவே தெலுங்கு கற்றுக் கொண்டு தெலுங்கில் ஒரு காதல் கதையை எழுதினாராம். அக்கதை பவன் கல்யாணுக்குப் பிடித்துப் போனாலும் வேறு படங்களின் காரணமாக ஆரம்பிக்க முடியாமல் போய் இருக்கிறது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு அந்தப் படத்தை ஆரம்பிக்கலாம் என நினைத்த போது காதல் கதைகள் தனக்கு இனி பொருத்தமாக இருக்காது என பவன் கல்யாண் நடிக்க மறுத்துவிட்டாராம். அந்தக் கதையில் மட்டும் அவர் நடித்திருந்தால் அது சிறப்பாக இருந்திருக்கும் என்று கூறியுள்ளார் சூர்யா.




