மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

தமிழில் தற்போது வில்லன், குணச்சித்திர நடிகர் என மாறி மாறி பயணித்துக் கொண்டிருப்பவர் எஸ்ஜே சூர்யா. நானி நடித்துள்ள 'சரிபோத சனிவாரம்' என்ற படத்தில் வில்லத்தனமான இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் எஸ்ஜே சூர்யா நடித்துள்ளார். இப்படம் தமிழிலும் டப்பிங் ஆகி வெளியாக உள்ளது.
இப்படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது எஸ்ஜே சூர்யா, கதை எழுதி இயக்க முடியாமல் போன பவன் கல்யாண் படம் ஒன்றைப் பற்றிய தகவலைப் பகிர்ந்து கொண்டார்.
தமிழில் விஜய், ஜோதிகா நடித்து வெளிவந்து வெற்றி பெற்ற 'குஷி' படத்தை அதே பெயரில் தெலுங்கில் பவன் கல்யாண், பூமிகா நடிப்பில் ரீமேக் செய்து இயக்கினார் எஸ்ஜே சூர்யா. அப்படம் தெலுங்கிலும் பெரிய வெற்றியைப் பெற்றது. பவன் கல்யாணின் முக்கியமான படங்களில் அந்தப் படத்திற்கும் ஒரு இடமுண்டு. அதன்பின் பவன் கல்யாண் நடித்த 'கொமரம் புலி' என்ற படத்தை இயக்கினார் சூர்யா. ஆனால், அது தோல்விப் படமாக அமைந்தது.
அதற்கடுத்து பவன் கல்யாணுக்காகவே தெலுங்கு கற்றுக் கொண்டு தெலுங்கில் ஒரு காதல் கதையை எழுதினாராம். அக்கதை பவன் கல்யாணுக்குப் பிடித்துப் போனாலும் வேறு படங்களின் காரணமாக ஆரம்பிக்க முடியாமல் போய் இருக்கிறது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு அந்தப் படத்தை ஆரம்பிக்கலாம் என நினைத்த போது காதல் கதைகள் தனக்கு இனி பொருத்தமாக இருக்காது என பவன் கல்யாண் நடிக்க மறுத்துவிட்டாராம். அந்தக் கதையில் மட்டும் அவர் நடித்திருந்தால் அது சிறப்பாக இருந்திருக்கும் என்று கூறியுள்ளார் சூர்யா.




