சண்டை கலைஞர்கள், கராத்தே மாஸ்டருக்கு நன்றி கூறிய நடிகை அபிராமி | முதல்வரை சந்திக்கும் சினிமாதுறையினர் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? | தனுசை விட 100 மடங்கு சிறப்பாக நடித்து இருக்கும் கஸ்துாரிராஜா: மிஷ்கின் புகழாரம் | 20 கோடி கடன் வரவில்லை.. யாரும் போன் எடுக்கலை..: கே. ராஜன் பற்றி அவர் குடும்பத்தினர் | ஹாலிவுட் பாணியில் 'டாக்ஸிக்' படத்தின் விநியோக முறையை பின்பற்றும் யஷ்! | ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வரும் பிரபாஸ்! | கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவுடன் காதலா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீலீலா! | இயக்குனர் கஸ்தூரிராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ள 'ஹபீபி' மே 28 ல் ரிலீஸ் | நாகரிகமற்ற கேள்விகள்: கோபமடைந்த மாளவிகா மோகனன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரை முதன்முதலாக பார்த்து, வியந்து நின்ற சாண்டோ எம் எம் ஏ சின்னப்பதேவர் |

'கேஜிஎப்' படத்தின் இரண்டு பாகங்கள் மற்றும் 'சலார்' உள்ளிட்ட படங்களில் இயக்குனர் பிரசாந்த் நீலிடம் இணை இயக்குனராக பணியாற்றி வருபவர் கீர்த்தன் நடகவுடா. இந்த படங்களில் சிறிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். தற்போது பிரசாந்த் நீல் ஜூனியர் என்டிஆரை வைத்து இயக்கி வரும் படத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவரது நான்கரை வயது மகன் சிறுவன் சிரஞ்சீவி ஷோனார்ஸ் லிப்ட் விபத்தில் சிக்கி மரணம் அடைந்துள்ளான்.
எப்போதும் துறுதுறுப்பாக விளையாடிக் கொண்டிருக்கும் இந்த சிறுவன் மரணம் அடைந்தது பெற்றோரையும் அருகில் உள்ளவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த மறைவு குறித்து பிரபல நடிகரும் ஆந்திராவின் துணை முதல்வருமான பவன் கல்யாண் தனது ஆழ்ந்த இரங்கல்களை கீர்த்தன் நடகவுடா குடும்பத்திற்கு தெரிவித்துள்ளார். இந்த லிப்ட் விபத்து மரணம் எப்படி நடந்தது என்பது குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.