பிளாஷ்பேக் : சோக ராகங்கள் கூட சுக ராகங்களாக மாறும் எம்ஜிஆரின் பாடல்கள் | செப். 20ல் வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா | கார்த்தி 29வது படத்தை இயக்கும் டாணாக்காரன் பட இயக்குனர் | மீண்டும் இணைந்த செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி! | மூக்குத்தி அம்மன் 2வை இயக்கும் சுந்தர் சி | ஜானி மாஸ்டரை கட்சியிலிருந்து நீக்கிய ஜனசேனா கட்சி | 'குட் பேட் அக்லி' படத்தில் விஜய்யின் வசனத்தை பேசி நடிக்கும் அஜித்! | அசோக்செல்வன் எப்படிப்பட்டவர்? உடைத்து பேசிய கீர்த்தி பாண்டியன்! | பாலிவுட்டில் வில்லனாக என்ட்ரி கொடுக்கும் சூர்யா? | 7 மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்! |
வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் இசையமைப்பில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா மற்றும் பலர் நடிக்கும் படம் 'தி கோட்'. இப்படம் செப்டம்பர் 5ம் தேதி உலக அளவில் வெளியாக உள்ளது.
பொதுவாக முன்னணி நடிகர்களின் தமிழ்ப் படங்களுக்கான பிரிமியர் காட்சிகள் அமெரிக்காவில் இந்திய நேரப்படி அதிகாலை 4 மணிக்கே நடக்கும். ஆனால், 'தி கோட்' படத்திற்கான அமெரிக்கா பிரிமியர் காட்சிகளை அந்த நேரத்தில் திரையிட தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் அனுமதிக்கவில்லையாம். இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு, அதாவது அமெரிக்க நேரப்படி இரவு 9.30 மணிக்கு மட்டுமே திரையிட அனுமதி அளித்துள்ளார்களாம்.
இதன் காரணமாக அமெரிக்க பிரிமியர் வசூலில் பாதிப்பு ஏற்படும் என அமெரிக்க வினியோகஸ்தர் தன்னுடைய வருத்தத்தை எக்ஸ் தளத்தில் வெளிப்படையாகப் பதிவிட்டுள்ளார்.
மேலும் அமெரிக்க வினியோகஸ்தரான அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'தி கோட்' சம்பந்தப்பட்ட எக்ஸ் தளப் பதிவுகளில் படத் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் பெயரைக் குறிப்பிடுவதில்லை. அதற்கு அந்நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அர்ச்சனா கல்பாத்தி, “இப்படத்திற்கான வினியோகஸ்தரான நீங்கள், தயாரிப்பு நிறுவனத்தின் பெயரைக் கண்டிப்பாகக் குறிப்பிட வேண்டும்,” என்று கமெண்ட் செய்துள்ளார். தயாரிப்பாளரும், வினியோகஸ்தரும் இப்படி ஒருவரை மாற்றி மற்றொருவர் கமெண்ட் செய்து கொள்வதால் அவர்களுக்கிடையே ஏதும் மோதலா என பேச ஆரம்பித்துவிட்டார்கள்.