‛‛திரும்பி போற ஐடியா இல்ல... ஐயம் கம்மிங்...'' : விஜயின் ‛ஜனநாயகன்' டிரைலர் வெளியீடு | ‛ஜனநாயகன்' சென்சார் சான்று தடுப்பது யாரோ.? | ‛தி ராஜா சாப்' திருப்புமுனையாக அமையும் : நிதி அகர்வால் நம்பிக்கை | பாக்யராஜ் 50 : முதல்வருக்கு அழைப்பு | பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கிர்த்தி ஷெட்டி | யு.கே-வில் பராசக்தி முன்பதிவு விவரம் | முதல்வர் தலைமையில் ரஜினி, கமல் கலந்து கொள்ளும் நிகழ்வு எது தெரியுமா | மவுன படமான ‛காந்தி டாக்ஸ்' ஜனவரி 30ல் ரிலீஸ் | ரஜினியுடன் அனிருத் இணையும் 7வது படம் | சாயா தேவியின் 'அலப்பறை' |

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து கடந்தாண்டு வெளியான படம் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம்' (சுருக்கமாக 'தி கோட்'). மீனாட்சி சவுத்ரி, சிநேகா, பிரபுதேவா, பிரசாந்த், மோகன், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
படம் வெளியானதும் வசூல் நிலவரம் குறித்து அவ்வப்போது தயாரிப்பு தரப்பில் இருந்து போஸ்டர்கள் வெளியிடப்பட்டது. இறுதியாக படம் ரூ.450 கோடி வசூலித்ததாகவும் சொன்னார்கள். தற்போது ஏஜிஎஸ் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள 'டிராகன்' படம் நாளை மறுநாள் (பிப்.,21) வெளியாகிறது. இதன் புரமோஷனுக்காக ஏஜிஎஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பேட்டியளித்து வருகிறார்.
அவரிடம் 'தி கோட்' பட வசூல் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அர்ச்சனா கூறியதாவது: தி கோட் திரைப்படம் ரூ.450 கோடி வசூல் என்று பலரும் கூறி வருகின்றனர். அதில் திரையரங்கைத் தாண்டி உள்ள வியாபாரம் எதுவும் சேர்க்கப்படவில்லை. அதையும் சேர்த்தால் பெரிதாக இருக்கும்.
நாங்கள் சொன்னது, திரையரங்க மொத்த வசூல் மட்டுமே. அதிலிருந்து வரியை எல்லாம் கழித்து கணக்கிட வேண்டும். பெரிய படங்களுக்கு வெளியீட்டுக்கு முன்பே திரையரங்க வசூலைத் தாண்டிய அனைத்து வியாபாரமும் பெரிய உறுதுணையாக இருக்கும். அதில் இருந்தே பெருவாரியான பணத்தை எடுத்துவிட முடியும். திரையரங்க வசூலில் இருந்து வரும் பெரும்பாலான தொகை லாபமாகவே இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.