அழகுக்காக அறுவை சிகிச்சையா : ரகுல் ப்ரீத் சிங் பதில் | ''அவுரங்கசீப்புக்கு 2 அறை கொடுக்க வேண்டும்'' ; சூர்யா பட விழாவில் விஜய் தேவரகொண்டா காட்டம் | 'ஜன கன மன' 2ம் பாகம் இருக்கிறது ; உறுதிப்படுத்திய இயக்குனர் | பிரபல மலையாள இயக்குனர் ஷாஜி என்.காருண் மரணம் ; கேன்ஸ் விருது பெற்றவர் | 'பேமிலிமேன்-3' வெப்சீரிஸ் நடிகர் நீர்வீழ்ச்சியில் விழுந்து மரணம் | போதை மீட்பு மையத்திற்கு அனுப்பப்படும் வில்லன் நடிகர் ஷைன் டாம் சாக்கோ | ஜூலையில் திரைக்கு வரும் அனுஷ்காவின் காட்டி படம் | மகாராஜா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது | பிரசாந்த் நீல் - ஜூனியர் என்டிஆர் படம்: அடுத்தாண்டு ஜூன் 25ல் ரிலீஸ் | டிடி நெக்ஸ்ட் லெவல் டிரைலர் எப்போது? |
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து கடந்தாண்டு வெளியான படம் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம்' (சுருக்கமாக 'தி கோட்'). மீனாட்சி சவுத்ரி, சிநேகா, பிரபுதேவா, பிரசாந்த், மோகன், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
படம் வெளியானதும் வசூல் நிலவரம் குறித்து அவ்வப்போது தயாரிப்பு தரப்பில் இருந்து போஸ்டர்கள் வெளியிடப்பட்டது. இறுதியாக படம் ரூ.450 கோடி வசூலித்ததாகவும் சொன்னார்கள். தற்போது ஏஜிஎஸ் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள 'டிராகன்' படம் நாளை மறுநாள் (பிப்.,21) வெளியாகிறது. இதன் புரமோஷனுக்காக ஏஜிஎஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பேட்டியளித்து வருகிறார்.
அவரிடம் 'தி கோட்' பட வசூல் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அர்ச்சனா கூறியதாவது: தி கோட் திரைப்படம் ரூ.450 கோடி வசூல் என்று பலரும் கூறி வருகின்றனர். அதில் திரையரங்கைத் தாண்டி உள்ள வியாபாரம் எதுவும் சேர்க்கப்படவில்லை. அதையும் சேர்த்தால் பெரிதாக இருக்கும்.
நாங்கள் சொன்னது, திரையரங்க மொத்த வசூல் மட்டுமே. அதிலிருந்து வரியை எல்லாம் கழித்து கணக்கிட வேண்டும். பெரிய படங்களுக்கு வெளியீட்டுக்கு முன்பே திரையரங்க வசூலைத் தாண்டிய அனைத்து வியாபாரமும் பெரிய உறுதுணையாக இருக்கும். அதில் இருந்தே பெருவாரியான பணத்தை எடுத்துவிட முடியும். திரையரங்க வசூலில் இருந்து வரும் பெரும்பாலான தொகை லாபமாகவே இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.