ரஜினிக்கு சங்கடம் தரக்கூடாது என நினைத்து டைட்டிலை மாற்றிய முருகதாஸ் | இயக்குனர் ஷங்கரின் சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை | புரமோஷன் செய்தாலும் ரசிகர்களே வெற்றியை தீர்மானிக்கிறார்கள்: அர்ஜூன் கபூர் | சாவா படத்திற்கு வரி விலக்கு அறிவித்த மத்திய பிரதேச முதல்வர் | 25 நிமிடம் விளம்பரம் போட்டு சோதித்த திரையரங்கம் : ஒரு லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம் | ஜுனியர் என்டிஆர் - பிரசாந்த் நீல் படப்பிடிப்பு துவங்கியது | சுந்தரா டிராவல்ஸ் 2ம் பாகத்தின் அப்டேட் | தமிழ் சினிமாவில் 21 ஆண்டுகளை நிறைவு செய்த பிரியாமணி | புன்னகை பூவே சீரியலை விட்டு விலகிய சைத்ரா | இயக்குனராக ஹாட்ரிக் வெற்றி பெறுவாரா தனுஷ்? |
ஏ.ஆர்.கே சரவணன் இயக்கத்தில் ஆதி, நிக்கி கல்ராணி, அருண்ராஜா காமராஜ், ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2017ல் வெளியான படம் 'மரகத நாணயம்'. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்ற இப்படத்தை ஆக்சிஸ் பிலிம் பேக்ட்ரி நிறுவனம் தயாரித்திருந்தது. இதன் 2வது பாகம் தயாராக உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனாலும், அதன்பின் எந்தவித அப்டேட்டும் வெளிவரவில்லை.
இதற்கிடையே ஆதி நடிப்பில் அறிவழகன் இயக்கியுள்ள 'சப்தம்' படம் பிப்.,28ல் ரிலீசாகிறது. இப்படத்தின் புரமோஷனுக்காக பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவரும் ஆதியிடம் 'மரகத நாணயம் 2' குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ''மரகத நாணயம் 2 விரைவில் துவங்க உள்ளோம். அதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. முதல் பாகத்தில் பணியாற்றியவர்களும் சேர்ந்து பெரிய குழுவினர் இணைந்திருக்கிறார்கள். முதல் பாகத்தின் கதை சிறியதாக இருந்தது, 2ம் பாகத்தின் கதை பெரியதாக இருக்கும். கண்டிப்பாக நல்ல படமாக வரும் என நம்புகிறோம்'' என பதிலளித்தார் ஆதி.