சாதியை எதிர்த்துதான் நான் படம் எடுக்கிறேன்! சொல்கிறார் மாரி செல்வராஜ் | சிரஞ்சீவியின் பெயர், குரல், புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை போட்ட நீதிமன்றம்! | தகுதிக்கு உரிய சம்பளம் கேட்க தயங்குவதில்லை! - சொல்லுகிறார் பிரியாமணி | பிளாஷ்பேக்: தபால்காரர் தேர்வு செய்த தரமான பாடலுடன் வெளிவந்த “தங்கை” திரைப்படம் | 'பைசன்' படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு | ஆதங்கத்துடன் புலம்பும் முகமூடி நடிகை | நடிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் நடிகை | மலையூரு நாட்டாமை மனச காட்டு பூட்டாம..: ‛டூரிஸ்ட் பேமிலி' கமலேஷ் | அனுபமாவின் அனுபவம் | 59 நாட்களில் தமிழ் கற்றேன்: ‛செம்பருத்தி பூ' ஸ்வாதி |

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்து தீபாவளிக்கு திரைக்கு வந்துள்ள படம் ‛பைசன்'. இந்த படம் இதுவரை உலக அளவில் 50 கோடி வசூலை நெருங்கியுள்ளது. இந்த நிலையில் நேற்று பைசன் படத்தின் வெற்றி விழா நடந்தது. அப்போது பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ், ‛‛எனது படம் என்றாலே சாதியை பற்றியதாகத்தான் இருக்கும் என்று அது குறித்து என்னிடத்தில் அனைவரும் கேள்வி கேட்கிறார்கள். அப்படி யாரும் என்னிடத்தில் கேள்வி கேட்காதீர்கள். அது என்னை ரொம்பவே பாதிக்கிறது. நீங்கள் கேள்வி கேட்பதில் உங்களுக்கும் எனக்கும் இடையே முரண்பாடு வந்து விடக்கூடாது என்று நினைக்கிறேன்.
அப்படி கேட்டால் நான் இன்னும் அதிகமாக வேலை செய்வேன். ஆனால் உங்களை நிராகரித்து விடுவேன். குறிப்பாக என்னுடைய கலையை, அரசியலை யாராவது பிடுங்க முயற்சித்தால் அவர்களை எதிர்த்து மூர்க்கமாக போராடுவேன். அதனால் அதுபோன்ற கேள்விகளை தவிர்த்து விடுங்கள்'' என்று கூறிய மாரி செல்வராஜ், ‛‛நான் எடுப்பது சாதி படம் என்றால் அது உங்களுடைய மொழி. ஆனால் என்னை பொருத்தவரை நான் எடுப்பது சாதியை எதிர்க்கும் படம். இதை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பேன். அதோடு உங்களை மகிழ்ச்சிப்படுத்தக் கூடிய 300 படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. என்னை அந்த கூட்டத்துக்குள் தள்ள முயற்சி செய்யாதீர்கள்'' என்று கேட்டுக்கொண்டார் மாரி செல்வராஜ்.