பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு | உஸ்தாத் பகத்சிங் : ரூ.100 கோடி மேல் நஷ்டம் வருமா? | ஒரே நாளில் தெலுங்கில் வெளியாகும் இரண்டு தமிழ்ப் படங்கள் | பவன் கல்யாண் படங்களில் நடிக்க தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | விஜய் பற்றி விமர்சனம் : சமுத்திரகனி பதில் |

‛பருத்திவீரன்' ப்ரியாமணி திருமணத்திற்கு பிறகும் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பரவலாக நடித்து வருகிறார். தற்போது தமிழில் விஜயின் ‛ஜனநாயகன்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பவர், தெலுங்கில் ‛சரஸ்வதி' என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில் தனது சம்பளம் குறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.
அதில், ‛‛எப்போதுமே பிரபலங்கள் தங்களது மார்க்கெட் அடிப்படையில் சம்பளம் கேட்பார்கள். இது நியாயமான ஒன்றுதான். என்னை பொருத்தவரை எனது தகுதிக்கு உரிய சம்பளத்தை கேட்கிறேன். அதை மீறி நான் கேட்பதில்லை. என்னுடைய தற்போதைய மதிப்பு என்னவென்று எனக்கு தெரியும். அதற்கு உரிய சம்பளத்தை கேட்பதற்கு நான் தயங்குவதில்லை. குறைவாக கொடுத்தாலும் நான் ஏற்பதில்லை என்கிறார்'' பிரியாமணி.




