முதல் படம் 'மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ்: வீடியோ வெளியிட்டு திரிஷா நெகிழ்ச்சி | மூன்று மொழிகளிலும் வேகமாக வளரும் அனஸ்வரா ராஜன் | அதர்வாவின் இதயம் முரளி படத்தில் பஹத் பாசில் | நடிகை Vs இயக்குனர் : வரலட்சுமி சரத்குமார் வெளியிட்ட வீடியோ | இதுதான் வெற்றியா... : கேள்வி கேட்ட ரஜினி மகள் | புற்றுநோய் பாதிப்பு பற்றி மனம் திறந்த மம்தா மோகன்தாஸ் | 'தலைவர் தம்பி தலைமையில் முதல் பிரிடேட்டர்' வரை; இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பாடகர் ஆன புகழ் : பிளாஷ்பேக் சொல்லி பீலிங் | இனியா நடித்த கவர்ச்சி படம் | 'சர்வம் மாயா' பட இயக்குனரை நேரில் சந்தித்து பாராட்டிய ராதிகா |

சென்னையில் கடந்த வாரம் நடந்த ஒரு நிகழ்ச்சியில், நடிகர் விஜய் அரசியலில் ஜெயிக்கமாட்டார். அவர் கண்டிப்பாக நவம்பர் மாதம் மீண்டும் நடிக்க வருவார். நான் 2 ஆண்டுகளில் அவரை வைத்து படம் தயாரிப்பேன். எனக்கு ஜோசியம் தெரியும் என்று பேசினார் அனலி படத்தின் ஹீரோயின் சிந்தியா. அந்த பேச்சு வைரல் ஆனது. விஜய் ரசிகர்கள், த வெ க ஆதரவாளர்கள் அமெரிக்கா வாழ் சிந்தியாவை திட்டினர். தனது அனலி படம் பிரபலம் ஆக, அப்படி அவர் பேசியதாக கேள்வி. படத்தின் தயாரிப்பாளரும் அவரே என்பதால் படத்தை விளம்பரப்படுத்த இப்படி பேசினார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் அனலி படம் நேற்று வெளியானது. சென்னையில் சில தியேட்டரில் மட்டுமே வெளியான நிலையில், முதற்காட்சிக்கு கூட்டம் இல்லை. ஒரு பிரபல தியேட்டருக்கு சென்று அனலி பட நிலவரத்தை பார்வையிட்ட சிந்தியா உண்மை நிலையை அறிந்து அதிர்ந்து போனார். படக்குழுவினரிடம் கொஞ்சம் ஆவேசமாக பேசியபடி, கண் கலங்கி தியேட்டரை விட்டு வெளியேறினார். கஷ்டப்பட்டு சம்பாதித்த சிந்தியா இதற்கு முன்பு வர்ணாசிரமம், தினசரி படங்களை தயாரித்தார். அதிலும் அவருக்கு பெரிய நஷ்டம். அதை விட பெரிய பட்ஜெட்டில் அனலி படத்தை தயாரித்து, வழக்கம்போல் அவரே ஹீரோயினாக நடித்தார். படம் வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை. இதிலும் சில கோடி நஷ்டம் என தகவல். அடுத்தும் சிந்தியா படம் தயாரிப்பாரா? அவரே நடிப்பாரா என்பது இப்போதைய கேள்வி.