ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' |

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும், நடிகர் ரஜினிகாந்திற்கும் இடையே உள்ள நெருக்கமான நட்பு ரசிகர்கள் அறிந்ததுதான். தற்போது ரஜினியின் படங்களுக்கு இளையராஜா இசையமைப்பதில்லை என்றாலும் இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசிக் கொள்வார்கள். இளையராஜாவின் ஸ்டுடியோவுக்கு ரஜினிகாந்த் அடிக்கடி போவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
அப்படி அவர்கள் இருவரும் நேற்று சந்தித்துக் கொண்ட போது வெளிநாட்டுப் பெண் தயாரிப்பாளரான சிந்தியா லூர்து அவர்களை சந்தித்ததைப் பற்றி அவரது இன்ஸ்டா தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“இன்று ராஜா சாரின் அலுவலகத்தில் சூப்பர்ஸ்டாரை சந்தித்தேன். என்னுடன் ஒரே புகைப்படத்தில் இரண்டு ஜாம்பவான்கள். இதைவிட வேறு என்ன கேட்கப் போகிறேன். குறிப்பாக அவர்களுக்கு இடையே நடந்த அழகான சண்டையை ரசித்தேன். ரஜினி சாருக்கு மரியாதை தரும் விதமாக அவரை நடுவில் நிற்க வேண்டுமென ராஜா சார் கேட்டுக் கொண்டார். ஆனால், ராஜா சாருக்கு மரியாதை தரும் விதமாக என்னை நடுவில் நிற்க வேண்டுமென ரஜினி சார் கேட்டுக் கொண்டார். நாங்கள் மூவரும் அவரவர் எங்கு நிற்க வேண்டுமென முடிவெடுக்கும் வரை அந்த சண்டை சில வினாடிகளுக்கு நீடித்தது. சூப்பர் ஸ்டாரின் ஆசீர்வாதமும் கிடைத்தது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த தயாரிப்பாளர், பாடகி, நடிகையான சிந்தியா லூர்து தயாரித்து நடிக்கும் 'தினசரி' என்ற படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார்.




