ஜான்வி கபூர் : கிளாமர் வாய்ப்புகளை மட்டுமே தரும் தெலுங்கு சினிமா | மக்கள் மேடை : தனி இயக்கம் துவக்கினார் ரஜினி மனைவி லதா | 60 வயதில் மூன்றாவது திருமணம் : அமீர்கானை விமர்சிக்கும் ரசிகர்கள் | காஜல் அகர்வால் நடிக்கும் 'தி இந்தியா ஸ்டோரி' ஜூலை 24ம் தேதி வெளியாகிறது! | மீண்டும் வெப் சீரிஸில் நடிக்கும் நாகசைதன்யா | ஜனநாயகன் : வினியோகஸ்தர்களுக்கு பணம் திருப்பித் தரப்படுகிறதா? | கருப்பு - தமிழக வசூல் 175 கோடி, அதிகாரப்பூர்வ அறிவிப்பு | பெத்தி : முதல் நாள் வசூல் ரூ.135 கோடி | 8 வருடங்களுக்கு பிறகு நாயகியாக திரும்பி வரும் ஆஸ்னா ஜவேரி | மறுபிரவேசம் தொடங்கி விட்டது : ஈடன் மகிழ்ச்சி |

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும், நடிகர் ரஜினிகாந்திற்கும் இடையே உள்ள நெருக்கமான நட்பு ரசிகர்கள் அறிந்ததுதான். தற்போது ரஜினியின் படங்களுக்கு இளையராஜா இசையமைப்பதில்லை என்றாலும் இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசிக் கொள்வார்கள். இளையராஜாவின் ஸ்டுடியோவுக்கு ரஜினிகாந்த் அடிக்கடி போவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
அப்படி அவர்கள் இருவரும் நேற்று சந்தித்துக் கொண்ட போது வெளிநாட்டுப் பெண் தயாரிப்பாளரான சிந்தியா லூர்து அவர்களை சந்தித்ததைப் பற்றி அவரது இன்ஸ்டா தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“இன்று ராஜா சாரின் அலுவலகத்தில் சூப்பர்ஸ்டாரை சந்தித்தேன். என்னுடன் ஒரே புகைப்படத்தில் இரண்டு ஜாம்பவான்கள். இதைவிட வேறு என்ன கேட்கப் போகிறேன். குறிப்பாக அவர்களுக்கு இடையே நடந்த அழகான சண்டையை ரசித்தேன். ரஜினி சாருக்கு மரியாதை தரும் விதமாக அவரை நடுவில் நிற்க வேண்டுமென ராஜா சார் கேட்டுக் கொண்டார். ஆனால், ராஜா சாருக்கு மரியாதை தரும் விதமாக என்னை நடுவில் நிற்க வேண்டுமென ரஜினி சார் கேட்டுக் கொண்டார். நாங்கள் மூவரும் அவரவர் எங்கு நிற்க வேண்டுமென முடிவெடுக்கும் வரை அந்த சண்டை சில வினாடிகளுக்கு நீடித்தது. சூப்பர் ஸ்டாரின் ஆசீர்வாதமும் கிடைத்தது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த தயாரிப்பாளர், பாடகி, நடிகையான சிந்தியா லூர்து தயாரித்து நடிக்கும் 'தினசரி' என்ற படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார்.




